districts

img

பாசிச சக்திகளை விரட்டியடித்து ஜனநாயகத்தை மீட்போம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை பேச்சு

கோவை, ஏப்.4- 18 ஆவது மக்களவைத் தேர் தல் என்பது ஜனநாயகத்தை மீட்டெ டுக்க வேண்டிய தேர்தல். எனவே, மோடியையும், எடப்பாடியையும் தோற்கடித்து டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார். கோவை கணபதியில் புதனன்று  நடைபெற்ற, இந்தியா கூட்டணி  தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத் தில், கோவை நாடாளுமன்ற திமுக  வேட்பாளர் கணபதி ராஜ்குமா ருக்கு ஆதரவு தெரிவித்து தமிழக  காங்கிரஸ் தலைவர் செல்வபெருந் தகை பேசுகையில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள்  தயாராகி விட்டார்கள். இந்த தேசத் தில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமா? சர்வாதிகாரம் கைப் பற்ற வேண்டுமா? இரண்டு செய்தி  தான் இந்த நாட்டில் இருக்கிற கேள்வி. ஜனநாயகத்தை வீழ்த்து வதற்கு ஒரு பாசிச சக்தி முயற்சி செய்து கொண்டிருக்கிறது.  அந்த பாசிச சக்தியுடைய  தொங்கு சதை தான் கோயம்புத்தூ ரில் நமக்கு எதிராக நிற்கிறது. இந்த  ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிச அமைப்பு வருவதற்கு முன்பு இந்த  தேசம் அமைதி பூங்காவாக இருந் தது. எங்கெல்லாம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் போகிறதோ, அதனு டைய முகமூடியா? இருக்கிற பாஜக செல்கிறதோ அங்கெல்லாம் மதக் கலவரம் நடக்கும். அங்கு எல்லாம் சாதி கலவரம் நடக்கும். அமைதி பூங்காவான தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? இன் னும் பாசிச விஷத்தை விதைப்பவர் கள் யார்? என நாம் விழித்துக் கொள்ள வேண்டும். எனவே, ஜன நாயகம் வெல்ல, பாசிசம் அழிய, உதயசூரியன் சின்னத்தில் வாக்க ளிக்க வேண்டும்.  மேலும், எடப்பாடியும், மோடி அணியும் டெபாசிட் வாங்க கூடாது.  கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்குகளை விட இரண்டு மடங்கு  வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். கோயம் புத்தூரில் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும் இந்த தேசத்தை பாது காக்கின்ற வாக்குகளாக இருக்க  வேண்டும். வாக்குகள் உதயசூரி யன் சின்னமாக மாறட்டும் என் றார்.  இந்த பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், அகில இந்திய  காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு இணை தேசிய ஒருங்கிணைப்பாளர் டென்சன் ராஜா, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், மதிமுக ஆர்ஆர் மோகன் குமார், மனித நேய ஜனநாய கட்சி மாவட்டச் செய லாளர் எம்எச்.அப்பாஸ், வீனஸ் மணி, ரவி, காயத்திரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  மேட்டுபாளையம் இதேபோன்று, நீலகிரி நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து, மேட்டுப் பாளையம் பகுதியில், கு.செல்வப் பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடு பட்டார். அப்போது மக்கள் விரோத  பாஜக ஆட்சிக்கு எதிராக பேசிய அவர், உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்குசேகரித்தார். இப்பிரச்சாரத்தின் போது, இந்தியா  கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்,  தொண்டர்கள் பலர் உடனிருந்த னர். பொள்ளாச்சி பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்ட ணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசா மியை ஆதரித்து பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே செல் வபெருந்தகை பிரச்சாரம் செய்தார்.  இப்பிரச்சாரத்தின் போது, காங்கி ரஸ் மாவட்டச் செயலாளர் தென்ன ரசு, நகரச் செயலாளர் கே.பகவதி,  திமுக தெற்கு மாவட்டச் செயலா ளர் தளபதி முருகேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் அன்பரசன் மற்றும் இந்திய கூட்டணி கட்சிக ளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.