அவிநாசி, ஜூன் 4- பஞ்சு விலையை குறைத்து, விசைத்தறி தொழிலை பாது காக்க வேண்டும் என அவிநாசி யில் சனியன்று நடைபெற்ற சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகி கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன மாநாடு வரு கின்ற ஜூன் மாதம் 28 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் நடைபெறுகிறது. இதை யொட்டி மாநில நிர்வாகிகள் கூட்டம் அவிநாசியில் ராம மூர்த்தி இல்லத்தில் நடைபெற் றது. இதில் விசைத்தறி சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் முத்து சாமி, மாநில பொதுச் செயலா ளர் சந்திரன், மாநில பொருளா ளர் அசோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ள னர். இதில், வரலாறு காணாத பஞ்சு நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் நலிவடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் தொழில் அமைப்பு கள், தொழிற்சங்க அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி யும், ஒன்றிய அரசு நூல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பஞ்சு நூல் பதுக் கல் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சீரான விலையில் தேவையான நூல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஜவுளித் தொழில் அமைப்புகள் மாநில அளவில் ஒன்றுபட்டு, நீடித்த போராட்டம் நடத்த முன்வர வேண்டும் என சம்மேளன வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மாநில மாநாட்டில் ஜவுளித் தொழில் பாதுகாப்பு மற் றும் தொழிலாளர் உரிமைகளை பற்றி விவாதித்து தீர்மானம் நிறை வேற்றப்பட உள்ளது. மாநாட்டில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந் திரராசன், பொதுச் செயலா ளர் சுகுமாரன், விசைத்தறி சம்மே ளன தலைவர் பி.முத்துசாமி, பொதுச் செயலாளர் எம்.சந்திரன், கே.சி.கோபி குமார்,கே.மோகன் உட்பட மாநில நிர்வாகிகளும், 200 பிரதிநிதிகளும் பங்கேற்கின் றனர். இறுதியில் ஜூன் 28 மாலை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.