திருப்பூர், அக். 11 - திருப்பூர் மாவட்டத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் செவ்வாயன்று வெற் றிகரமாக நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி, உடு மலை, பல்லடம், ஊத்துக்குளி, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட ஏழு மையங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிளவுவாத சீர்கு லைவு நடவடிக்கைகளை எதிர்த்து முறிய டிக்கவும், தமிழகம் ஓரணியாய் ஒற்றுமையு டன் உள்ளது என்பதை உணர்த்தும் வகை யிலும் செவ்வாய்க்கிழமை திருப்பூர் மாவட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கள், திராவிடர் கழகம், இந்திய தேசிய காங் கிரஸ், மதிமுக, தேசிய லீக் மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகளைச் சேர்ந்தோர் தன் னார்வமாக இந்த மனித சங்கிலியில் பங்கேற் றனர். அனைத்து அமைப்புகளின் நிர்வாகி கள், ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கரம் கோர்த்து நின்றனர். மனித நேய முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை பலர் கழுத்தில் அணிந்தும், கைகளில் ஏந்தி யும் இருந்தனர்.
திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் மகாத்மா காந்தி சிலை அருகில் இருந்து, நொய்யல் பாலம், குமரன் சாலை, டவுன் ஹால், தியாகி குமரன் நினைவகம் வரை இந்த மனித சங்கிலி நடைபெற்றது. அவிநாசியில் புதிய பேருந்து நிலை யத்தில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் வரை இந்த மனித சங்கிலி நடைபெற்றது. ஊத்துக்குளி ஆர்எஸ் பேருந்து நிறுத் தம் பகுதியிலும், உடுமலையில் காமராஜர் சிலை முன்பும், பல்லடத்தில் கோவை சாலை பேருந்து நிலையம் முன்பும், தாராபுரத்தில் காந்தி சிலை முன்பிருந்து பொள்ளாச்சி சாலை பூக்கடை கார்னர் வரையிலும், காங்கே யத்தில் பேருந்து நிலையம் எதிரே திருப்பூர் சாலையிலும் மனித சங்கிலியாக கைக் கோர்த்து நின்றனர். ஏழு மையங்களில் நூற்றுக்கணக்கா னோர் பங்கேற்று சமூகத்தை பிளவுபடுத்தும் மதவாத சக்திகளை எதிர்த்தும், சமூக நல்லி ணக்கத்தை பாதுகாப்போம் என்றும் முழக்கம் எழுப்பினர்.