கோவை, ஜூலை 31- உணவில்லாமல் மக்கள் அல் லாடும் போது உணர்வில்லாமல் மௌன சாட்சிகளாக கடந்து போகி றோம் என கோவையில் எல்ஐசி நடத்திய 75 ஆம் ஆண்டு சுதந்திர தின நிறைவு கருத்தரங்கு உரை யில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் வேதனை தெரிவித்தார். அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் கோவை, சேலம் கோட்டங்களின் சார்பில் சுதந்திர தின நிறைவு சிறப்பு கருத்தரங்கம் கோவை டவுன் ஹால் பகுதியில் டெலி சர்ச் சில் சனியன்று நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு சங்கத்தின் கோவை கோட்ட தலைவர் பி.வி. குமார் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட பொதுச் செயலா ளர் ஆர்.தர்மலிங்கம் வரவேற்பு ரையாற்றினார். இதில், இந்தியாவின் கனவு என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் (பொ) மதுக்கூர் ராமலிங்கமும், விடுதலையும் பொது துறையும் என்ற தலைப்பில் தென் மண்டல இன்சுரன்ஸ் கூட்டமைப் பின் துணைத் தலைவர் க.சுவாமி நாதனும் உரையாற்றினர். இதில், மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கம் சுதந்திர தினத்தின் பவள விழாவை ஜூலை மாதமே துவங்கி இருக்கிறது. எதையுமே முன்னோக் கிப் பார்க்கின்ற சங்கம் என்ற வகை யில் நாம் 75 ஆவது சுதந்திர தின நிறைவை கொண்டாட துவங்கி யுள்ளோம்.
எப்போதும் நாட்டில் எது நடந் தாலும் இடது பக்கத்திலிருந்து தான் சத்தம் வரும். இந்த இடதுக்கும் வலதுக்கும் இடையில் தான் சுதந் திர தின கொண்டாட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது. உதகை, ஏற் காடு போன்ற இடங்களில் பல்வேறு மலர்கள் நிறைந்திருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதேபோல் தான் வானவில்லில் ஏழு நிறங்கள் இருப்பதால்தான் பார்ப் பதற்கு அழகாக இருக்கிறது. அது மாதிரி தான் இந்தியாவின் பன் முகத்தன்மையும். இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது காந்தி என்ற ஒற்றை வரி யோடு முடிவதல்ல, அதற்கு முன் னும் பின்னும் எண்ணற்ற தியாகங் கள் எண்ணற்ற போராட்டங்கள் நடந்துள்ளது. சுதந்திரம் பெறும் போது அப்போதுள்ள மக்கள் எண் ணற்ற கனவுகளுடன் இருந்தனர். நாட்டில் வறுமை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இவை அனைத்தும் ஒழிந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். சுதந்திரம் பெறும்போது ஒருபுறம் விடுதலை என்ற உற்சாகம் இருந் தது. மறுபுறமோ நாட்டில் கலவரம் கொலை போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த கலவரத்தின் போது ஏராள மான பெண்கள் பாலியல் துன்புறுத் தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1947 இல் தான் இந்த நிலைமை என்றால் தற்போது 2022 ஆம் ஆண்டு 75 ஆண் டுகள் ஆகியும் இந்த நிலைமை தொடர்வது வேதனையளிக்கிறது.
தற்போது நாட்டில் அத்தியா வசிய பொருள் என்பது தங்கம், வைரம் போன்ற பொருட்களும், ஆபரண பொருட்களாக அரிசி, தயிர் உள்ளிட்ட பொருட்கள் மாறி விட்டன. இருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களிடம் கொடுக்க வேண்டும். ஆனால், இங்கு இல் லாதவர்கள் இருப்பவர்களுக்கு கொடுக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் எண் ணற்ற மக்கள் உணவு இல்லாமல் செத்து மாண்டனர். இவை அனைத் தையும் மெளன சாட்சிகளாக நாம் பார்த்துக் கொண்டிருந்தோம், உணர்வற்றவர்களாக கடந்து சென் றோம். இதனை அவ்வளவு எளி தில் மறந்து விட முடியாது. இன்று நாட்டில் தினம் தோறும் ஒரு பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றிய அரசு 40 க்கும் மேற்பட்ட வார்த்தைகளுக்கு தடை விதித்துள் ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கே பேச உரிமை இல்லை என் றால், ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சுதந்தி ரம் கிடைத்தால் போதும் என்ற கனவு அன்று இருந்தது. ஆனால் இன்றோ விடிந்தால் உயிரோடு இருந்தால் போதும் என்ற கனவு இன்றைய நிலைமையாக உள் ளது.
ஆகவே, நான் முன்னேறுவேன் என்ற கனவை காணாமல், நாம் முன்னேறுவோம் என்ற கூட்டுக் கன வில் தான் இந்தியாவில் எதிர்கா லம் உள்ளது. பட்டொளி வீசி பறக் கின்ற ஜனநாயக, மதச்சார்பற்ற, கூட்டாட்சி இந்தியாவை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம், என்றார். முன்னதாக, விடுதலையும் பொது துறையும் என்ற தலைப் பில் க.சுவாமிநாதன் பேசுகையில், இந்திய கனவின் கூறு தான் பொதுத் துறை உருவாக்கம். இந்த 75 ஆண்டு காலங்களில் இல்லாத ஒன்றாக ஒன்றிய அரசு புதிய பொதுத்துறை கொள்கையை அறிவித்துள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இந்தக் கொள்கைகளை எதிர்த்து தொழி லாளர் இயக்கங்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இந்த 30 ஆண் டுகளாக ஒரு பொதுத்துறை நிறு வனத்தை பாதுகாக்க போராடிக் கொண்டிருப்பவர்கள் அகில இந் திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தினர் மட்டுமே. ஒரு பொதுத்துறை நிறுவனத்தை நாம் ஏன் பாது காக்க வேண்டும் என்றால் அது நாட் டின் தேவையாக உள்ளது. தற் போது நாட்டில் பொதுத்துறை நிறு வனங்களுக்கு ஆபத்து வந்துள் ளது. இது அனைத்தையும் நாம் சித்தாந்த ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். 28 ஆண்டுகால போராட்டம் ஒரு தொழிற்சங்கத்தை எப்படி இயக்க வேண்டும் என்ற ஆதாரத்தை இந் திய தொழிற் சங்கங்களுக்கு நாம் தந்துள்ளோம். அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் எல்ஐசி தான் தாங்கி பிடிக்கிறது. ஆனால் இன்று எல்ஐசி நிறுவனத்தை விற் கிற நோக்கில் ஒன்றிய அரசு முனைப்பு கட்டி வருகிறது. விடுதலைக் கனவை பாது காக்க வேண்டிய அதே நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்க நாம் எண்ணற்ற போராட் டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது சூழல் உள்ளது, என் றார்.