districts

img

விதவை சான்று பெற அலைக்கழிப்பு

தருமபுரி, ஜூலை 18- ஆதரவற்ற விதவை சான்று வழங்க அலைக்கழிப்பதாக கூறி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித் தார்.  தருமபுரி, கடமடை கிராமத்தை சேர்ந்த வர் பச்சையப்பன் மனைவி சாலம்மாள். இவர் களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சாலம்மாளின் கணவர்  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் விபத் தில் இறந்து விட்டார். இந்நிலையில் சாலம் மாள் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி  வருகிறார். இவர் அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதரவற்ற விதவை சான்றிழ் விண்ணப் பித்துள்ளார். ஆனால், விண்ணபித்து பல  மாதங்களாகியும் சான்றிதழ் கிடைக்க வில்லை. அலுவலர்களால்  அலைக்கழிக்கப் படுவதாகவும், சான்றிதழ் இல்லாமல் விதவை உதவித்தொகை கிடைக்கவில்லை.  இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது. எனவே, ஆதரவற்ற விதவை சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.