districts

img

முதலாம் மண்டல பாசனத்திற்கு பிப்.12ல் நீர் திறப்பு

உடுமலை, பிப்.10-  உடுமலை திருமூர்த்தி அணையிலி ருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு வரும் பிப்.12 ஆம் தேதி தண்ணீர் திறக் கப்படுகிறது. உடுமலை திருமூர்த்தி அணை மூலம் பிஏபி பாசனத் திட்டத்தில், திருப் பூர்,  கோவை  மாவட்டங்களில் உள்ள  3.77  லட்சம் ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி  பெறுகின்றன. மேலும், உடுமலை நக ராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடி மங்கலம் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திட்ட தொகுப்பு அணை களிலிருந்து, 48.39 கி.மீ., தூரம் அடர்ந்த  வனப்பகுதிகளில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள காண்டூர் கால் வாய் மூலம், திருமூர்த்தி அணைக்கு  தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப் படுகிறது. பிரதான கால்வாய் மூலம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப் பட்டு வருகிறது. நடப்பாண்டு பருவ மழை பெய்யாததால், கடும் வறட்சி நில வுகிறது. திட்ட தொகுப்பு அணைகளி லும் நீர் இருப்பு பெருமளவு குறைந்தது.  இதனால் நான்காம் மண்டல பாசனத் திற்கு நீர் திறப்பதும், 5 சுற்றுகள்  தண்ணீர்  வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால்  இரண்டு சுற்றுகள் மட்டும் தண்ணீர் தரப் பட்டது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, திருமூர்த்தி அணையிலிருந்து, முதலாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட, 94 ஆயி ரத்து 521 ஏக்கர் நிலங்களில் உள்ள  பயிர்களை காப்பாற்றவும், கால்நடை களின் குடிநீர் தேவைக்காகவும் இரண் டரை சுற்று தண்ணீரை பிப்.12 ஆம் தேதி  முதல் மே மாதம் 22 ஆம் தேதி வரை  100 நாட்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 5 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு  மிகாமல்  தண்ணீர் திறக்க தமிழக அரசு  அனுமதி வழங்கி உள்ளதால் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. 10 ஆம் தேதி  நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 52.74 அடியாகவும். அணைக்கு நீர்வரத்து காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 622 கன அடியாகவும் உள் ளது.