தருமபுரி, பிப்.15- தருமபுரி மாவட்டத்தில் உள்ள நாகாவதி அணையிலிருந்து 2 ஆம் போக சாகுபடிக்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அருகே உள்ளது நாகாவதி அணை. இந்த அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் மூலம் அரக்காசனஅள்ளியில் 417.77 ஹெக்டர், சின்னம்பள்ளியில் 722.61 ஹெக்டர், பெரும்பாலையில் 852.62 ஹெக்டர் என மொத்தம் ஆயி ரத்து 993 ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாகாவதி அணையிலிருந்து 2021 – 2022 ஆம் ஆண்டிற்கு 2 ஆம் போக புன்செய் பயிர்களுக்கு சாகு படி பாசனத்திற்காக திங்களன்று மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தண்ணீரை திறந்து வைத்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி கூறுகையில், நாகாவதி அணையிலிருந்து இரண் டாம் போக புன்செய் பயிர் சாகுபடி பாசனத்திற்காக, தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போ துள்ள நீர்வரத்தை கணக்கில் கொண்டு பென்னாகரம் வட்டத்தி லுள்ள ஆயக்கட்டு பாசனதாரர்கள் பயன்பெறும் வகையில், இடது மற் றும் வலதுபுற கால்வாய் முறையே இரண்டு மண்டலங்களாக பிரித்து தலா 5 நாட்கள் தண்ணீர் விட்டும், 5 நாட்களுக்கு நிறுத்தியும், விநா டிக்கு 39.80 கனஅடி வீதம் 100 நாட் களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் பென்னாகரம் வட்டத்திலுள்ள அரக் காசனஅள்ளி, சின்னம்பள்ளி மற் றும் பெரும்பாலை வருவாய் கிரா மங்களில் 1993 ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறும். விவசாயிகள் முழு ஒத்துழைப்பு நல்கி, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி செய்து, அதிக விளைச்சல் பெற்று பயனடைய வேண்டும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் விமல நாதன் உட்பட அரசுத்துறை அலுவ லர்கள், அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.