districts

img

பொங்குபாளையம் ஊராட்சி நிர்வாகத்தால் சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

திருப்பூர், டிச. 12- பொங்குபாளையம் ஊராட்சி நிர்வா கம் குப்பைகளை சாலையில் கொட்டுவ தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். திருப்பூர் மாவட்டம்  பொங்குபாளை யம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை  சந்திக்கும் இடத்தில் கொட்டப்பட்டு  இருக்கும் குப்பைகளால்  நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை அடைந்துள்ள னர்.  இதுகுறித்து பொதுமக்கள் தெரி வித்ததாவது,  பொங்குபாளையம் ஊராட்சி ஊழியர்கள் சுற்றுவட்டாரத் தில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கள் அனைத்தையும் கொண்டு வந்து  இங்கு கொட்டி விடுகிறார்கள்.  துப்புரவு  பணியாளர்களிடம் ஏன் இங்கு  கொட்டுகிறீர்கள் என்று கேட்டால்  ஊராட்சி நிர்வாகம் தான் இங்கு கொட்ட  சொல்கிறது என்று கூறுகிறார்கள். இது  குறித்து பலமுறை தகவல் தெரிவித்தும்  முறையான நடவடிக்கை எடுக்கப்படு வதும் இல்லை.  அருகில் உள்ள சக்தி விக்னேஸ்வரா பள்ளிக்கு செல்ல மாண வர்கள் இந்த  சாலையை பயன்படுத்து கிறார்கள். இங்கு கொட்டப்படும் கோழி  இறகுகள்,  பிளாஸ்டிக் கழிவுகள்  போன்றவற்றதால் விரைவில் நோய்  தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.   மேலும் காலை நேரங்களில் அருகா மையில் உள்ள பகுதிகளிலிருந்து புதிய  திருப்பூருக்கு வேலைக்கு செல் பவர்களும் இந்த சாலையை தான் பயன் படுத்துகிறார்கள். சாலையை மறைக் கும் அளவிற்கு குப்பைகள் இருப்பதால்  போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகி றது. எனவே ஊராட்சி நிர்வாகம் இங்கு குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.