சேலம், ஜன. 16- நரிகளை பிடித்து வந்து வங்கா நரிப் பொங்கல் விழாவை நடத்துவதற்கு வனத்து றையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் பொங்கல் விழா வெகு சிறப் பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம் வாழப் பாடி அதன் சுற்று வட்டார பகுதியான சிஎன் பாளையம், சின்ன கிருஷ்ணாபுரம் கொட்ட வாடி, தமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வங்காநரி பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வங்காநரியைப் பிடித்து வந்து அதை மாலையிட்டு அலங்க ரித்து பின்னர் அதனை ஒரு கயிற்றில் கட்டி கிரா மம் முழுவதும் ஓட விட்டு மக்கள் அனை வரும் அதை வணங்கி மகிழ்வர்.நம் பிக்கை அடிப்படையில் வங்காநரி ஜல்லிக் கட்டு பழைய காலங்களில் நடந்து வந்தது. இதன்ஒருபகுதியாக, செவ்வாயன்று வாழப்பாடி வனத்துறை அலுவலகத்தில், சேலம் மாவட்ட வன அலுவலர் ரவி தலை மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற் றது. இதில், கிராமம் தோறும் நூற்றுக்கு மேற் பட்ட வனத்துறை அதிகாரிகள் பார்வை யிட்டு, கிராம மக்களிடம் நல் உறவை ஏற்படுத் திக் கொள்வது குறித்து ஆலோசிக்கப் பட்டது. மேலும், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களிடம் வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக பொதுமக் கள் வன விலங்குகளை வதைபடுத்தக்கூ டாது என்பதை அறிவுறுத்தினார். பல கிராம பகுதிகளில் பாரம்பரியமாக கொண்டாடப் பட்டு வரும் வங்காநரி ஆட்டத்திற்கு வனத்து றையினர் பல்வேறு கட்டுப்பாடு களை விதித்தனர். மீரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அழிந்து வரும் வனவிலங்கான வங்கா நரியை காப்பாற்ற பல்வேறு குழுக்களாக பிரிந்து நூற்றுக் கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கிராம பகுதி களில் முகாமிட்டு வனப்பகுதியை ஒட்டி யுள்ள கிராமங்களை தீவிரமாக கண்கா ணித்து வருகின்றனர்.