districts

img

பயிர், நகைக்கடன் கோரி காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், மார்ச் 18- பயிர், நகைக்கடன் கோரி முள் ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தினர் தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகையை செலுத்திவிட்டு புதிய பயிர் கடனுக்கு விண்ணப்பித்து உரம் மட்டும் பெற்றுக் கொண்ட விவசாயிகளுக்கு உரிய வகையில் தமிழக அரசின் பயிர் கடன் தள்ளு படி செய்ய வேண்டும். நகை கடன் தள்ளுபடியாகும் என்று காத்திருந்த விவசாயிகள் மீது நிர்பந்தம் செலுத் தாமல் கடன் வசூலிக்க வாய்ப் பளிக்க வேண்டும். 5 பவுனுக்கு கூடு தலாக நகைகளை அடகு வைத்து பயிர்க்கடன் பெற்றவர்களுக்கும் கடன் தள்ளுபடியை அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்க நாம கிரிப்பேட்டை ஒன்றியக்குழு சார் பில் தொடர் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. முள்ளுக்குறிச்சி கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற இப்போ ராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் கே.சின்னசாமி, ஒன்றிய செயலா ளர் ஏ.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், சிபிஎம் கிளை செயலாளர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளிடம் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங் களின் துணைப்பதிவாளர் செந்தில் குமார், ராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அர சின் கவனத்திற்கு கொண்டு செல் லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.