districts

img

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடுக

சேலம், டிச.28- மின்வாரிய திட்டத்திற்கு நிலம் வழங்கிய எடப்பாடி பகுதி விவசாயி கள் நிலத்துக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என  வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் புதனன்று காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி வட் டம், ஆடையூர் முதல் பூலாம்பட்டி  வரை கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு தமிழ்நாடு மின்சார  வாரியத்தால் அமைக்கப்பட்ட 110 கேவி மின் திட்டத்திற்கு நிலம் வழங் கிய விவசாயிகளுக்கு நிலத்துக் கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். உடையாபட்டி மின்சார மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு விவசாயிகள் சங்க எடப் பாடி தாலுகா செயலாளர் நா.ஜெய வேல் தலைமை வகித்தார். இப்போராட்டத்தை துவக்கி  வைத்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் பேசு கையில், தமிழ்நாடு மின்சார வாரி யத்தால் ஆடையூர் முதல் பூலாம் பட்டி, பில்லுக்குறிச்சி, இருப்பாளி, பூலாம்பட்டி வரை சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு 31 மின் கம் பங்கள்  அமைத்து 110 கேவி மின் திட்டம் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பாதிப்பு  அடைந்துள்ளன. மின் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட நிலங்களை யாரும் வாங்கவோ, விற்கவோ முடி யாத சூழல் ஏற்பட்டுள்ளது. நிலத் தின் மதிப்பு மிகவும் குறைவாக மாறி விட்டது. எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலத் திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண் டும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா, விவ சாய சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட தலை வர் எ.அன்பழகன், மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, சங்ககிரி  தாலுகா செயலாளர் ஆர்.ராஜேந்தி ரன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயி கள் கலந்து கொண்டனர்.