நாமக்கல், ஆக. 12- பணி நிரந்தரம், அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக் கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மண் டல மாநாடு வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள சிஐடியு அலுவல கத்தில் ஞாயிறன்று நாமக்கல் மண்டல ஆயத்த மாநாடு நடைபெற்றது. நிகழ் விற்கு சிஐடியு நாமக்கல் மாவட்டச் செய லாளரும், மாவட்ட உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க செயலாளருமான என்.வேலுச்சாமி தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் வி.கண்ணன் வரவேற்று பேசி னார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் கே.ரத்தின குமார் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். தனியார் மயமாக்கும் அரசாணை கள் 152, 139 ,10 ஐ திரும்ப பெற வேண் டும், சக மனிதரை சாக்கடைக்குள் இறங் கும் நடவடிக்கையை தடுத்திட வேண் டும். தகுதியுள்ள தூய்மைப் பணியாளர் கள் அனைவருக்கும், பதவி உயர்வு வாரிசு பணி வழங்கிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறும் இப்பேரணியில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கோர் பங்கேற்க உள்ளனர். சென்னை கோட்டையை நோக்கி பேரணியை வெற்றிகரமாக்கும் வகையில், இந்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. கோரிக் கைகளை விளக்கி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளன மாநில உதவி தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் நிறைவுறை யாற்றினார் . இந்த நிகழ்வில், நாமக்கல் மாவட்ட தலைவர் எம்.அசோகன் மற்றும் சேலம், ஈரோடு ,கரூர், திருப்பூர், கோவை, நீல கிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் திர ளாக கலந்து கொண்டனர். முடிவில், நாமக்கல் மாவட்டப் பொருளாளர் கு.சிவ ராஜ் நன்றி கூறினார்.