உணவில் பல்லி மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்
சேலம், பிப்.29- அரசு சட்டக் கல்லூரி விடுதி உணவில் பல்லி இருந்த தால் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே அரியனூர் பகுதி யில் அரசு சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. மாணவ, மாணவி களுக்கான விடுதியும் கல்லூரியிலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவிகள் தங்கியுள்ள விடுதியில், வியாழன்று வழக்கம் போல் அனைவருக்கும் உணவு வழங் கப்பட்டது. அப்போது, ஒரு மாணவியின் தட்டில் உணவுடன் பல்லி இருந்துள்ளது. இதை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த உணவை உட்கொண்ட மாண விகளில் ஒருவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, சட்ட கல்லூரி நிர்வாகம் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது. இந்த நிலையில், அம்மாணவியை தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களும் கல்லூரி வளாகத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே விடுதி யில் சுகாதாரமற்ற உணவுகள் வழங்குவதாக புகார் எழுந்த நிலையில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில், மீண்டும் உணவில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் தலைமையிலான குழுவினர், சட்டக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழர் பாரம்பரிய அறிவியல் கண்காட்சி
கோவை,பிப். 29- கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. இந்த கண்காட்சியில், அறிவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ், துறை சார்ந்த மாதிரிகளோடு பண்டைய கால தமிழர் பாரம்பரிய வாழ்க்கை முறையை காட்சிப்படுத் தப்பட்டுள்ளது. இந்த அறிவியல் கண்காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் பிறந்த நாளை முன் னிட்டு நடைபெற்ற கண்காட்சியில், மழலையர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைத் துத் துறைகளிலும் அறிவியல் படைப்புகளையும் மாதிரிக ளையும் உருவாக்கித் தங்கள் தனித் திறன்களை வெளிப்ப டுத்தினர். இதில் குறிப்பாக, காற்றாலை மின்உற்பத்தி, எரி மலைகள் இயங்கும் விதம், மண் அரிப்பு, மழைநீர் சேகரிப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் புதுவகை யான மாதிரிகள் செய்து கண் காட்சியில் காட்சிப்படுத்தி னர். மேலும் நமது தமிழ் பாரம்பரிய பண்டைய கால கோவில் களின் சிறப்பு, அஞ்சறைப் பெட்டி, பாரம்பரிய உணவு வகை கள், விளையாட்டுகள், மூலிகைச் செடிகள் என தமிழர் பாரம்பரிய வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்தும் வித மாக காட்சி படுத்தியிருந்தனர். இந்த கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களைத் தேர்வு செய்து பரிசுகளையும், சான்றிதழ்களையும், பாரதியார் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் பேராசிரியர். உதயகுமார் மற்றும் பேராசிரியர். தனசேகரன் ஆகியோர் வழங்கி கௌரவித் தனர்.
விபத்து - தம்பதி படுகாயம்
கோவை, பிப்.29- அன்னூர் அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளா னதில், தம்பதியினர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள சாணாம்பா ளையம் பிரிவைச்சேர்ந்தவர் எட்வின். இவரது மனைவி ஸ்டெபி ரோஜா. எட்வின் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினர் வியாழனன்று வீட்டில் இருந்து கோவை செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அன்னூர் - சத்தி சாலையில் சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்ற போது, மற்றொரு பகுதியில் இருந்து வந்த இருசக்கர வாக னம் சாலையை கடக்க முயன்றது. அப்போது, தம்பதியர் வந்த இருசக்கர வாகனம், சாலையை கடக்க முயன்ற வாக னம் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் நிலைதடுமாறி, எதிரே வந்த அரசுப் பேருந்தில் முன்பக்கத்தில் சிக்கி படுகா யம் அடைந்தனர். சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட் டது. எனினும் எட்வினின் கை பேருந்து சக்கரத்தில் சிக்கி முழுமையாக சிதைந்தது. உடனடியாக இருவரையும் மீட்ட பொதுமக்கள், அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த பதைபதைக் கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு
கோபி,பிப். 29- கோபியில் ரூபாய். 2.20 கோடி மதிப்பீட் டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரி வாக்க மைய கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத் தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யத்தில் ரூபாய். 2.20 கோடி மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டி டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் கோபி சுற்றுவட்டார விவசாயிகளின் 20 ஆண்டு கோரிக்கையாக வேளாண்மை துறை, தோட்டக்கலைதுறை, வேளாண்பொ றியியல்துறை இணைந்து ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிதாக ஒருங்கி ணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் 20 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது. இந்த ஒருங்கி ணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தில் விதைகள், உரங்கள், மருந்து கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் வைக்க கிடங்கு மற்றும் 150 பேர் குளிர் சாதன வசதியுடன் அமரக்கூடிய அரங்கம் என மூன்று துறை சார்ந்த அலுவலகம் ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன், வேளாண் உதவி இயக்குனர் முரளி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாழைத்தார்கள் ஏலம்
வாழைத்தார்கள் ஏலம் அவிநாசி, பிப்.29- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற வாழைத்தார்கள் மறைமுக ஏலத்தில் சுமார் 23 விவசாயி கள் கலந்து கொண்டனர் 230 வாழைதார்களை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்த னர். திருப்பூர், சுற்றுவட்டார வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 1,816 கிலோ வரத்து கொண்டு வரப் பட்டு ரூ.29,962 -க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் நேந்திரன் முதல் தரம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1,800 முதல் ரூ.2,000 -க்கும். இரண்டாம் தரம் ரூ.1,500 முதல் ரூ.1,800 -க்கும்,மூன்றாம் தரம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை யிலும், கதலி குவிண்டால் ஒன்றிக்கு முதல் தரம் ரூ.1,650 முதல் ரூ.1,800 க்கும், இரண்டாம் தரம் ரூ.1,250 முதல் ரூ.1,600 க்கும், முன்றாம் தரம் ரூ. 1,000 முதல் ரூ.1,200 என்ற விலை யில் ஏலம் போனது.
மார்ச் 3 போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது
திருப்பூர், பிப்.29- போலியோ நோயை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட் பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறியிருப் பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 895 மையங்கள் மூலமாகவும், நகர்ப்புறங்களில் 259 மையங்கள் மூலமாகவும் என மொத்தம் 1154 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங் கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்க ளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதில், 26 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலை யங்கள் மற்றும் புகை வண்டி நிலையங்களில் 23 குழுக்க ளும் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்ப ணிக்காக சுகாதாரத்துறை, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4616 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடவுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1.98 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்முகாம்களுக்கு தேவையான சொட்டு மருந்து ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எனவே ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஞாயிற் றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து அளிக்க வலியுறுத் தப்பட்டுள்ளது.
வாழைத்தார்கள் ஏலம்
வாழைத்தார்கள் ஏலம் அவிநாசி, பிப்.29- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் சுமார் 23 விவசாயிகள் கலந்து கொண்ட னர். 230 வாழைதார்களை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்த னர். திருப்பூர், சுற்றுவட்டார வியாபாரிகள் 4 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 1,816 கிலோ வரத்து கொண்டு வரப்பட்டு ரூ.29,962 க்கு ஏலம் நடைபெற்றது. புதனன்று நடை பெற்ற ஏலத்தில் நேந்திரன் முதல் தரம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1,800 முதல் ரூ.2,000 க்கும். இரண்டாம் தரம் ரூ.1,500 முதல் ரூ.1,800 க்கும், மூன்றாம் தரம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையி லும், கதலி குவிண்டால் ஒன்றிக்கு முதல் தரம் ரூ.1,650 முதல் ரூ.1,800 க்கும், இரண்டாம் தரம் ரூ.1,250 முதல் ரூ.1,600 க்கும், முன்றாம் தரம் ரூ.1,000 முதல் ரூ.1,200 என்ற விலையில் ஏலம் போனது.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை திருப்பூர், பிப்.29- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடி யாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ். அப்புசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வியாழனன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 10 ஒன்றியப் பகுதிக ளில் தொடர்ச்சியாக வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட் டம் 1000 அடிக்கும் கீழே சென்று விட்டதால், விவசாயம் செய்ய போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதற்கான தீர்வாக அத்திக்கடவு அவிநாசி திட் டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.
மார்ச் 3 போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது
மார்ச் 3 போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது திருப்பூர், பிப்.29- போலியோ நோயை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட் பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், ஒரே நாளில் போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறியிருப் பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 895 மையங்கள் மூலமாகவும், நகர்ப்புறங்களில் 259 மையங்கள் மூலமாகவும் என மொத்தம் 1154 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங் கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்க ளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதில், 26 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலை யங்கள் மற்றும் புகை வண்டி நிலையங்களில் 23 குழுக்க ளும் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இப்ப ணிக்காக சுகாதாரத்துறை, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 4616 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடவுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1.98 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்முகாம்களுக்கு தேவையான சொட்டு மருந்து ஆரம்ப சுகாதார நிலையங் களுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எனவே ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஞாயிற் றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து அளிக்க வலியுறுத் தப்பட்டுள்ளது.
வாழைத்தார்கள் ஏலம்
வாழைத்தார்கள் ஏலம் அவிநாசி, பிப்.29- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் சுமார் 23 விவசாயிகள் கலந்து கொண்ட னர். 230 வாழைதார்களை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்த னர். திருப்பூர், சுற்றுவட்டார வியாபாரிகள் 4 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். மொத்தம் 1,816 கிலோ வரத்து கொண்டு வரப்பட்டு ரூ.29,962 க்கு ஏலம் நடைபெற்றது. புதனன்று நடை பெற்ற ஏலத்தில் நேந்திரன் முதல் தரம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.1,800 முதல் ரூ.2,000 க்கும். இரண்டாம் தரம் ரூ.1,500 முதல் ரூ.1,800 க்கும், மூன்றாம் தரம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையி லும், கதலி குவிண்டால் ஒன்றிக்கு முதல் தரம் ரூ.1,650 முதல் ரூ.1,800 க்கும், இரண்டாம் தரம் ரூ.1,250 முதல் ரூ.1,600 க்கும், முன்றாம் தரம் ரூ.1,000 முதல் ரூ.1,200 என்ற விலையில் ஏலம் போனது.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை திருப்பூர், பிப்.29- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடி யாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ். அப்புசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வியாழனன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 10 ஒன்றியப் பகுதிக ளில் தொடர்ச்சியாக வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட் டம் 1000 அடிக்கும் கீழே சென்று விட்டதால், விவசாயம் செய்ய போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதற்கான தீர்வாக அத்திக்கடவு அவிநாசி திட் டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.
சட்டக் கல்லூரி கிளை மாநாடு
சேலம், பிப் 29- கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் இருந்து கல்லூ ரிக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் சட்டக் கல்லூரி மாணவர் சங்க கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின், சேலம் சட்டக் கல்லூரி கிளை மாநாடு, சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் வியாழ னன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சேலம் மாவட்ட துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட் டச் செயற்குழு உறுப்பினர் விமல் குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் சே.பவித்திரன் துவக்க உரையாடினார். வாச்சாத்தி வழக்கும் தீர்ப்பும் என்ற தலைப் பில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சண்முகராஜா உரையாற் றினார். நிறைவாக மாநிலத் தலைவர் சம்சீர் நிறைவு உரையாற் றினார். மாநாட்டில், சட்டக் கல்லூரி விடுதியில் மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி இருந்துள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு கார ணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். வரும் நாட்களில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமாக இருக்க வேண் டும். கல்லூரியில் தமிழ் வழி கல்வி கொண்டு வர வேண் டும். கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் இருந்து கல்லூ ரிக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மாநாட்டின் நிறைவில், கிளைத் தலைவராக செரினா, கிளைச் செயலாளராக விக்னேஸ்வரன் உள்ளிட்டு 18 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இம்மாநாட்டில் நூற்றுக் கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
தீயில் சிக்கி தொழிலாளி பலி
தீயில் சிக்கி தொழிலாளி பலி கோவை, பிப்.29- மதுக்கரை அருகே களைச்செடிகளுக்கு தீ வைத்த தொழி லாளி அத்தீயிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த நாச்சிபாளை யத்தில் சங்கீத் பகாரியா என்பவருக்கு சொந்தமாக 57 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இங்கு அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி(70)என்பவர் தோட்டத்தை பராமரிக்கும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் புதனன்று காலை தோட்டத்தில் அதிகளவில் களைச்செடிகள் இருந்ததால், மேற் பார்வையாளர் சண்முகம் அதை தீ வைத்து எரிக்குமாறு வேலுச்சாமியிடம் கூறியுள்ளார். உடனே வேலுச்சாமியும், களைகளுக்கு தீவைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த தீ காடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும் கணவர் வேலுச் சாமி, வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, உறவினர்களுடன் வந்து காடு முழுவதும் தேடியுள் ளார். அப்போது அங்குள்ள ஒரு புதரில் வேலுச்சாமியின் உடல் எரிந்த நிலையில் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். காடு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததில், மூச்சு திணறல் ஏற்பட்டு வேலுச்சாமி இறந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த மதுக் கரை போலீசார், வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி உடற்கூ றாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம்
மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரம் நாமக்கல், பிப்.29- நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், பள்ளிபாளை யத்தில் நடைபெறும் மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம டைந்துள்ளன. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில், போக்குவ ரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தொலைநோக்கு திட்டத்துடன் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், சுமார் 200 கோடி ரூபாய் மதிப் பீட்டில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணி கள் நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத் தில் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது ஆட்சி மாற்றத் திற்குப் பிறகு 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மேம்பா லம் அமைக்கும் பணிகள், கிட்டத்தட்ட முடிவடையும் தருவா யில் உள்ளது. 180 பிரம்மாண்டமான தூண்களுடன் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு, மேல்பால வேலைகள் நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், மேம்பா லப் பணி வேலைகளை முடிப்பதற்கு இன்னும் முழுமை யாக ஒரு மாத காலமே தேவைப்படும். தற்போது உள்ள நிலையில் திருச்செங்கோடு, ஈரோடு, சேலம், சங்ககிரி உள் ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங் கள் முதல் அரசுப் பேருந்துகள் வரை அனைத்து விதமான வாகனங்களும் மாற்று பாதையில் சென்று வருகிறது. இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரி சலை சரிசெய்து வருகிறோம் என்றார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போரட்டம்
விவசாயிகளுக்கு ஆதரவாக போரட்டம் சேலம், பிப்.29- தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத் திற்கு ஆதரவாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அனைத்து விவசா யிகள் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. விளைப் பொருட்க ளுக்கு ஆதார விலை, விவ சாயக் கடன் தள்ளுபடி, விவ சாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கு கள் ரத்து உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து விவ சாயிகள் தில்லியில் போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய மோடி தலைமை யிலான பாஜக அரசு கடும் அடக்குமுறையை ஏவி வருகிறது. சாலையில், ஆணி அடிப்பது, ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது, துப்பாக்கி சூடு நடத்துவது என கொடூரத்தை அரங் கேற்றி வருகிறது. உணவ ளித்த விவசாயிளின் நியா யமான கோரிக்கை நிறை வேற்ற வக்கில்லாத ஒன் றிய அரசின் நடவடிக்கை களுக்கு எதிராக நாடு முழு வதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்க ளும் போராடி வருகின்றனர். இந்நிலையில், அவர்க ளுக்கு ஆதரவாக, பல் வேறு பகுதிகளில் விவசாயி கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அனைத்து விவசாயிகள் சங் கங்களின் கூட்டமைப்பு சார் பில் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவ லக நுழைவுப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.