districts

img

பனை விதைகள் நட அரசு அதிகாரி தடை மாவட்ட ஆட்சியரிடம் தன்னார்வலர்கள் புகார்

நாமக்கல், செப்.17- குமாரபாளையத்தில் பனை விதைகள் நட அரசு அதிகாரி தடை செய்ததால் தன் னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஒரு  கோடி பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ், பனை விதை நட ஏற்பாடுகள் செய்யப்பட் டது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை யில், காவிரி கரையோரப்பகுதி, மேட்டூர்  கிழக்குக்கரை வாய்க்கால் கரையோரப் பகுதி ஆகிய பகுதிகளில் நடைபெற உள் ளது. இந்நிகழ்வு கடந்த ஞாயிறன்று பனை  விதைகள் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி காலை முதல் மாலை வரை பனை விதைகள் நடப்பட்டது. இதில் தட்டான் குட்டை ஊராட்சி பகுதியில் உள்ள மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் கரையோரப் பகுதியில் விவசாயி மற்றும் தன்னார்வலர் விஸ்வநாதன் மற்றும் நண்பர்கள் பனை விதைகளை நட்டுக்கொண்டிருந்தனர். அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதி காரி என்று கூறிய ஒருவர், இங்கு பனை விதைகளை நடக்கூடாது என்று பணிகளை தடுத்துள்ளார். இதுகுறித்து விஸ்வநாதன் கூறும்போது, மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிகளின் ஒரு கட்ட மாக நாங்கள் பனை விதைகளை நடும் பணியை செய்து கொண்டிருந்தோம். அப் போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி என்று கூறிகொண்ட அதிகாரி ஒருவர், வாய்க் கால் கரையில் பனை விதைகளை நடக் கூடாது, என்றார். மாவட்ட ஆட்சியர் வாய்க்கால் கரையோ ரம் பனை விதைகள் நட அனுமதி கொடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு  அதி காரியை தலைமை  வகிக்க செய்து, பெயர் பட்டியலை கூட வெளியிட்டுள்ளார். அப்படி யிருக்க ஆட்சியர் அனுமதி கொடுத்த இடத் தில், பனை விதை நடக்கூடாது என்கின்ற னர். தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் வித மாக மாவட்ட ஆட்சியர் செயல்பட்டு வருகி றார். ஆனால், இது போன்ற நபர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சி யர்  வசம் புகார் தெரிவித்து உள்ளோம். மன  உளைச்சலை ஏற்படுத்திய இவர் மீது தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.