districts

img

நூறுநாள் வேலை கேட்டு ஏப்.25ல் விதொச ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஏப்.11- அனைத்து ஊராட்சிகளுக்கும் நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏப்.25 ஆம் தேதி யன்று போராட்டம் நடைபெற்ற உள் ளதாக விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.  உபரி நிலத்தை மீட்பது, சமூக  ஒடுக்குமுறையை தகர்ப்பது, குறித்து அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில், தரும புரியில் சிறப்பு பேரவை கூட்டம்,  மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது.  இதில், மாநிலச் செயலாளர் ஜி.கணபதி, மாநிலக்குழு உறுப்பினர் ஜி.பாண்டி யம்மாள், மாவட்ட துணைத்தலைவர் சி.ராஜா உள்ளிட்டோர் பேசினர். இதேபோன்று, அரூரில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் குமரேசன் தலைமை வகித் தார். இதில், மாவட்ட செயலாளர் எம். முத்து, மாவட்ட துணைத்தலைவர் இ.கே.முருகன், நிர்வாகிகள் நேரு வீரப்பன் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர்.  இதில், அந்ததந்த மாவட்டங்க ளில் உள்ள உபரி, விவசாய  நிலங் களை நிலமற்ற விவசாய கூலி தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டும். வீடற்ற விவசாய தொழிலாளர்க ளுக்கு இலவசமனைபட்டா வழங்கி  அரசு வீடு கட்டித்தர வேண்டும். மாவட் டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களுக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்  வேலை வழங்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் ஒன்றுக்கு கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என முடிவு எடுக்கப்பட்டது.