districts

img

நீலகிரிக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

உதகை, ஜன.7- நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர்வாசிகள் மற் றும் அவர்களுடைய நல னுக்காக கட்டாயம் முகக் கவசம் அணிய வேண் டும் என மாவட்ட ஆட்சி யர் லட்சுமி பவ்யா அறிவு றுத்தியுள்ளார். எச்எம்பிவி (HMPV) வைரஸ் தற்போது பரவி வருவது, மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் கொரோனா போலவே,  மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். தற்போது இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் பரவி  விட்டது. அண்டை மாநிலமான கர்நாடகா பெங்களூரில் இரண்டு குழந்தைகள் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப் பட்டுள்ளதால், அங்கு முகக்கவசம் அணிய அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கர்நாடகம்  மற்றும் கேரளாவை ஒட்டி உள்ளதாலும், சுற்றுலாப் பயணி கள் ஏராளமானோர் வருவதாலும் நீலகிரி மாவட்டத்தில் சுகா தாரத்துறை பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து  வருகிறது. இதுகுறித்து  நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி  பவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எச்எம்டிவி வைரஸ் பரவாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்  என்பதையும், செய்யக்கூடாது என்பது குறித்து ஒரு அறிக்கையை சுகாதாரத்துறை தயாரித்து வருகிறது. அதேபோல் நீல கிரி மாவட்ட எல்லையில் உள்ள எல்லா சோதனைச்சாவடிகளி லும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதி கரித்தால் தேவைப்படும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். எச்எம்பிவி வைரஸ் பாதிப்பிற்காக மட்டுமின்றி சாதாரண சளி,  காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் கூட நீலகிரி வரும் சுற்று லாப் பயணிகள் அவர்களுடைய நலன் மற்றும் உள்ளூர் பொது மக்களின் பாதுகாப்பிற்காக முகக் கவசம் கட்டாயம் அணி வது நல்லது என்றார்.