districts

“ஆபரேசன் ரீபூட்” திட்டம்: மீண்டும் பாடச்சாலைக்கு செல்லும் குழந்தைகள்

ஒவ்வொரு மாணவரையும் சந்தித்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு படிக்க வர வேண்டும் என்று சொல்லியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு மாணவருக்கு பின்னாலும், ஒவ்வொரு பிரச்சனையும், சூழலும் இருந்தது. அதில் முடிந்ததை செய்து கொடுத்து, தற்போது மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான பணியை செய்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

கோவை மாநகர காவல்துறை யின் சார்பில் ‘ஆபரேசன் ரீபூட்’ என்ற திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 173 இடைநிற்றல் பள்ளி மாணவர்கள் மீண் டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக் கையை காவல்துறை எடுத்துள்ளது.  இதனையடுத்து, மீண்டும் பள்ளி யில் சேர்க்கப்பட்ட மாணவ, மாணவி களின் பெற்றோர்களுடனான சந்திப்பு  நிகழ்ச்சி காவல் ஆணையர் அலுவல கத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற் பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் கள், காவலர்கள் கலந்து கொண்ட னர். குடும்ப சூழ்நிலை காரணமாக வும், பொருளாதார ரீதியாக பின்தங் கிய நிலையில், மேலும் தகாத நபர் களுடன் பழக்கம் ஏற்பட்டு, பள்ளிக்கல் வியை நிறுத்திய நூற்றுக்கும் மேற் பட்ட பள்ளி மாணவர்களை காவல் துறை கண்டறிந்துள்ளது. மாவட்ட  கல்வி அலுவலகத்தை தொடர்பு  கொண்டு இடைநிற்றல் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து அவர்களை யும், அவர்களுடைய பெற்றோரையும்  சந்தித்து கல்வியின் முக்கியத்துவம்  குறித்து எடுத்துரைத்து, பள்ளியில் சேர்ப் பதற்கான பணியை ஒவ்வொரு மாந கர காவல் நிலையமும் மேற்கொண்டுள் ளது. ஒவ்வொரு மாணவ, மாணவி களை தொடர்பு கொண்ட போலீசார், பெற்றோர்களிடம் பாராட்டு விழா நடத் துவதாக தொடர்பு கொண்டுள்ளனர். பெற்றோர்கள் எதற்கு பாராட்டு விழா?  என குழம்பி நின்றபோது தான், மீண் டும் பள்ளியில் சேர்ப்பதற்காக என போலீசார் கூறியுள்ளனர்.

இவ்விழாவில் காவலர்கள் பேசு கையில், அதிகபட்சமாக உக்கடம்  காவல் நிலையத்தில் 15 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள னர். காவல் நிலையத்தில் உள்ள ‘போலீஸ் அக்கா’ திட்டத்தில் பணி  செய்பவர்கள் மற்றும் பெண்கள் மற் றும் குழந்தைகள் குறித்தான வழக்கு கள் பதியக்கூடிய காவலர்கள், மேலும் குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு போன்ற திட்டத்தில் பணிபுரியும் காவ லர்களை உள்ளடக்கிய மூன்று பிரி வைச் சேர்ந்தவர்கள் தொடர் முயற்சி யால் 178 மாணவ மாணவிகளை மீண் டும் பள்ளிக்கு வருவதற்கான பணி களை மேற்கொண்டுள்ளனர். அதில் 153 பேர் தற்போது கோவை மாவட்டத் தில் இருப்பதாகவும், 20 பேர் வெளி மாநிலத்தில் இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர். ஒவ்வொரு மாணவரையும் சந்தித்து அவர்களை மீண்டும் பள் ளிக்கு படிக்க வர வேண்டும் என்று சொல்லியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஒவ்வொரு மாணவ ருக்கு பின்னாலும், ஒவ்வொரு பிரச் சனையும், சூழலும் இருந்தது. அதில் முடிந்ததை செய்து கொடுத்து, தற் போது மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான பணியை செய்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

இதன்பின் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பேசினர். அப்போது, பெரும்பாலான மாணவர்கள் குடும்ப சூழ்நிலை கார ணமாகவும், பெற்றோர் இல்லாத நிலை யில் படிப்பை விட்டதாக தெரிவித்துள் ளனர். ஒரு சில மாணவர்கள் தன்னு டைய வயதில் பெரிய நபருடன் பழகி பள்ளி படிப்பை விட்டதாகவும் தெரிவித் துள்ளனர். மேலும், காவலர்கள் முத லில் வீட்டுக்கு வந்தது பயமாக இருந்த தாகவும், பின்பு அவர்கள் கல்வி குறித் தான செலவை ஏற்றுக்கொண்டு கல்வி படிப்பதற்கான அனைத்து நடவ டிக்கை மேற்கொண்டு தருவதாக அவர்கள் உத்தரவாதம் அளித்ததை  அடுத்து நாங்கள் மீண்டும் பள்ளிக்கு  செல்ல ஒப்புக்கொண்டோம் என மாண வர்கள் தெரிவித்தனர். அதில் ஒரு சில மாணவர்கள், வேலைக்கும் செல்லா மல் மீன் பிடிப்பது, ஊர் சுற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் காவ லர்கள் எனக்கு சரியான அறிவுரை கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும், வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெற்றோரை பார்த்துக் கொண் டிருப்பதற்காக பள்ளி படிப்பை விட்ட தாக ஒரு சில மாணவிகளும் தெரிவித்த னர். அவர்களுக்கான பொருளாதார மற்றும் கல்விக்கான செலவை ஏற்று கொள்வதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து, நாங்கள் பள்ளிக்கு மீண்டும் வருகிறோம் என்று மாணவ, மாணவி கள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் பேசுகையில், பள்ளி இடை நிற்றல் குழந்தைகளை ‘ஆப்ரே சன் ரீபுட்’ என்ற பெயரில் மீண்டும் படிக்க வைக்கும் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ‘போலீஸ் அக்கா’ திட்டத்தின் மூலம் பணியாற் றும் காவலர்கள் மூலம் இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பேசி னோம். கோவை மாநகரில் 173 குழந் தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த் துள்ளோம். 20 குழந்தைகள் வெளி  மாநிலத்தில் உள்ளனர். இன்னும் 30  குழந்தைகளிடம் பேசி வருகிறோம்.  உறுதுணையாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நன்றி. பள்ளி குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல வேண்டும். மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகை யில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது. இடை நிற்றல் குழந்தைகளை  தொடர்ந்து கண்காணிக்கவும் திட்டமிட் டுள்ளோம். எதிர்கால வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களை படிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம். பொருளா தார காரணத்தினால் இடை நிற்றல்  குழந்தைகளுக்கு முடிந்த உதவி களை செய்து மீண்டும் படிக்க வைக் கும் பணிகளை மேற்கொண்டு வருகி றோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை இடைநிற்றல் மாணவர்களை ஒருங்கி ணைத்து கூட்டம் நடத்தவும் திட்ட மிட்டுள்ளோம், என்றார். இந்த ஆபரேசன் ரீபூட் திட்டத்தால், பள்ளியில் இருந்து பாதியில் நின்ற  மாணவர்களை மீண்டும் பாடச் சாலைக்கு செல்ல வழிவகுத்துள்ளது. கோவை மாநகர காவல்துறையின் இந்த செயல்பாடு அனைவரின் கவ னத்தை ஈர்த்துள்ளது. (ந.நி)