districts

img

உடல் நலம் குன்றிய ஓய்வூதியர்கள் இல்லத்திற்கே சென்று நேர்காணல்

ஈரோடு, ஆக. 21- உடல் நலம் குன்றியவர் வீட்டிற்கே நேரில் சென்று  நேர்காணல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வுதியர் சங்கத்தின் கோரிக்கை ஏற் கப்பட்டது. ஈரோடு மாவட்ட கருவூல அலுவலர் சேஷாத்திரி தலைமையில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கருவூலர் அலுவலகத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் கருவூல அலு வலர் கோ. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில்,  மாவட்ட கருவூல அலுவலர் சேஷாத்திரி, ஈரோடு மாவட் டத்தில் உள்ள ஓய்வூதியர்கள் பிரச்னைகள் குறித்தும்,  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம ளித்தார். இதில், கடந்த பிப்ரவரி 2024 இல் மாவட்ட ஆட்சியர்  ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், காப்பீட்டு நிறுவன அலுவர்க ளுக்கு விதித்த காலக் கெடு அடிப்படையில் எடுத்த தீர்வு கள் குறித்து, நிறுவன அதிகாரி சந்திரசேகரன்  பதிலளித் தார். அதுபோல கொரோனா நிவாரணம் குறித்து  பதில் அளிக்க வேண்டிய காப்பீட்டு நிறுவன அலுவலர்  மணிகண்டன் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இந்நிலையில், அமைப்புகள் சார்பில் விடுக்கப்பட்ட  கோரிக்கைகளை அரசுக்கும் காப்பீட்டுத் திட்ட அதிகாரி களுக்கும் கொண்டு செல்வதாகவும், அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்கம் கோரிக்கைப்படி உடல் நலம் குன்றிய  நிலையில் வாழ் நாள் சான்று சமர்ப்பிக்க வர இயலாத  ஓய்வூதியர்கள் மாவட்டத்தில் எந்த எல்லையில் இருந்தா லும் அவர்கள் இல்லத்திற்கு கருவூல அதிகாரி நேரில்  சென்று சான்று செய்திட சேஷாத்திரி உறுதியளித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்கத்தின், மாவட்டச் செயலாளர் வ.பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் எஸ்.சங்கரன், எஸ்.பால  சுப்ரமணியன், ஜி.ஹரிதாஸ், மணிபாரதி, ஆர்.சீனிவா சன், கதிர்வேல் ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி ஆசிரி யர் அமைப்பின் சார்பில் ராஜ கோபால், பள்ளி அமைப்பு  ஓய்வூதியர் சார்பில் பூபதி மற்றும் பிற ஓய்வூதியர் அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.