கோவை, பிப்.23- கோவை நெகம கோட்டப்பொறியாளரின் அரசு விதி மீறலை கண்டித்து, நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை-திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் த்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, கோட்டத்தலைவர் பி.முருகேசன் தலைமை தாங்கினார். இதில், மாநில தலைவர் மா.பாலசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் எஸ்.மோகன்ராஜ் ஆகியோர் உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கோவை நெடுஞ்சாலைத்துறை கட்டு மானம் மற்றும், பராமரிப்புத்துறை கோட்ட பொறியாளர் சுந்தர மூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர் பீரான் ஆகியோரின் அரசு விதி மீறல் நடவடிக்கைகளை கண்டித்தும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்ட்டது. இதில், சங்கத்தின் மாநில செயலாளர் சு.செந்தில் நாதன், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் ஆகி யோர் நிறைவுரையாற்றினார். முடிவில், கோட்ட பொரு ளாளர் ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.