விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் உட்பட இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை கோரியும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெள்ளியன்று (ஜூன் 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமை ஏற்றார். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), மருதையன் (பொதுவுடைமைக் கருத்தியலாளர்), விசிக பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் பேசினர்.