districts

கடும் வறட்சியில் கிராமங்கள்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து தொடங்க கோரிக்கை

திருப்பூர், செப். 1 – திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி மற்றும்  ஊத்துக்குளி வட்டங்களில் கடும் வறட்சி நிலவு வதால் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை உடனடியாகத் துவக்கி குளம் குட்டை களுக்கு நீர் நிரப்ப வேண்டும். இத்திட்டத்தில்  குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம்  கம்பிவேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்  என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க் கூட்டத்தில் வியாழனன்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் பேசியதாவது: அத்திக்கடவு அவி நாசி திட்டப்பணிகள் முடிவு பெற்று ஈரோடு,  திருப்பூர், கோவை மாவட்டங்களில் திட்டத் தில் பயன்பெறும் குளம், குட்டைகளில்  நீரேற்றி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள் ளது. இந்நிலையில் திட்டத்தின் காலம் முடிந்து ஓராண்டு ஆகிவிட்டது. தற்போது  போதிய பருவமழை இல்லாத காரணத்தி னால் ஊராட்சி பகுதி குடியிருப்புகளில் குடிநீர்  பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிண றுகள், திறந்தவெளி கிணறுகளில் நிலத்தடி  நீர் மட்டம் கீழிறங்கி விவசாய பயிர்கள்  எல்லாம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. இந்த சூழ்நிலையில் அத்திக்கடவு -  அவிநாசி திட்டத்தை விரைந்து செயல்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும். கிராம ஊராட்சி களில் குளம் குட்டைகளில் பொருத்தப்பட் டுள்ள உபகரணங்கள், கருவிகளை கம்பி  வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்  என்றும் கேட்டுக் கொண்டார்.