districts

img

வாயைத் திறந்தால் “ஈ” தான் வாய்க்குள் செல்கிறது

அன்னூர் அருகே ஒரு கிரா மம் முழுவதும் ஈக்கள் தொல்லை அதிகரித்தி ருப்பதால் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அவதிக்குள்ளாகியுள் ளனர்.  கோவை மாவட்டம், அன்னூர் ஒன் றியத்தில் அமைந்துள்ளது பிள்ளை யப்பன்பாளையம் ஊராட்சி. “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற சொல்லாடலை இந்த கிராமத்திற் குள் அப்பட்டமாய் பொருத்தி விட லாம். அந்த அளவுக்கு பசுமையை யும், அமைதியான மக்களையும் கொண்டுள்ளது. இந்த ஊர். காடு மேடாய் கிடந்த நிலங்களை இங் குள்ள மக்கள் விவசாய பூமியாக்கி, தங்கள் வாழ்வாதாரத்திற்கு அடித்தள மிட்டு வாழ்ந்து வருகின்றனர். இதனி டையே சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையப்பன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அமைக்கப்பட் டன. “நம்ம ஊர்ல வேலைவாய்ப்பு அதிகமாகும், குறிப்பாக கோழிகள் மலிவு விலையில் கிடைக்கும்” என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். அடுத்த சில ஆண்டுகளில் கோழிப் பண்ணைகள் அவர்களது வாழ்வையே புரட்டுப்போடும் அளவுக்கு மாறி யிருக்கின்றன. இங்குள்ள பெரும்பாலான கோழிப் பண்ணைகள் கறிக்கோழிப்பண்ணை களாக அல்லாமல், முட்டை கோழிப் பண்ணைகளாக உள்ளன. கறிக் கோழிப்பண்ணைகளை காட்டிலும் மிகவும் தூய்மையாக பராமரிக்கப் பட வேண்டியவை இத்தகைய பண் ணைகள். ஆனால், இங்குள்ள பண் ணைகளில் கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதில்லை. பண்ணை வளாகத்தை தூய்மையாக பராமரிக் காததால், ஈக்கள் உற்பத்தி அதிகரிக் கத் துவங்கியுள்ளது. சமீப நாட்களில் ஈக்கள் உற்பத்தி பன்மடங்கு பெருகி, பிள்ளையப்பன்பாளையம் ஊரையே ஆக்கிரமித்துள்ளது. எங்கும் “ஈ” எதி லும் “ஈ” என்பதைப்போல, சமைய லறை, படுக்கையறை, பால் சொசைட்டி, பள்ளிக்கூடம், மளிகைக்கடை, வாக னங்கள் என்று ஈக்கள் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.

மக்களை மட்டுமல்லாது மாட்டுக் கொட்டாயைக் கூட விட்டுவைக்கா மல் ஈக்கள் மொய்க்கின்றன. இத னால் உடலை ஒரு நிமிடம் கூட  அசைக்காமல் ஓரிடத்தில் படுக்க முடியவில்லை இந்த விலங்குகளால். ஈ மொய்க்கும் உணவுகள் மற்றும் திண்படங்களை உட்கொள்வதால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு அடிக் கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற் பட்டு நோய்வாய்ப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கூறுகை யில், ஈக்களால் வீடுகளில், கதவு  மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்க முடிவதில்லை. ஒரு நிமிடம்  திறந்து வைத்தாலே நூற்றுக்கணக் கான ஈக்கள் உள்ளே வந்து மாவு,  உணவு தின்பண்டங்கள், தண்ணீர் ஆகியவற்றில் விழுந்து விடுகின்றன. எந்த உணவுப்பொருளையும் திறந்து வைக்க முடிவதில்லை. தண்ணீர் குடிக்க  வாயைத் திறந்தால் “ஈ” தான் வாய்க்குள் செல்கிறது. சாப்பிடும் போதும் மிக கவனமாக சாப்பிட வேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும், ஆட்சியர் அலு வலகத்திலும் பலமுறை புகார் மனு அளித்துவிட்டோம். அவ்வப்போது மருந்து தெளிக்க வருகிறார்கள். மருந்துகளுக்கு எந்த ஈ-யும் மசிவ தில்லை. மற்றபடி எந்த நடவடிக்கை யும் இல்லை.

ஈக்கள் தொல்லையால் சிலர்  வீடுகளை காலி செய்து விட்டனர். எங்கள் ஊரில் உள்ள வீடுகளுக்கு உறவினர்களே வருவதில்லை. குடியி ருப்புகளுக்கு அருகே அமைந்துள்ள கோழிப்பண்ணைகளை வேறு இடத் திற்கு மாற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைக்கும், வேதனைக்கும் அர சுக்கு நிர்வாகம் செவிசாய்க்க வில்லை என்றால் அடுத்த கட்டமாக சாலை மறியல் செய்யத் திட்டமிட்டுள் ளோம். அப்படியும் எங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் ஊரையே காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு மொத்தமாக குடிபெயரவும் துணிந்து விட்டோம், என்றார். “ஈ” தானே என்று எண்ணாமல் அதிகாரிகள் பிள்ளையப்பன்பாளை யம் கிராமத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்தால், இந்த மக்களின் துயரத்தை உணர முடியும். வாழ்வாதற்கான அடிப்படை வசதிகள் இருந்தும், லாப நோக்கில் செயல்படும் சில தனி நபர் களால் ஒரு கிராமமே துயரில் ஆழ்ந் துள்ளது. இந்த பிரச்சனையில் அதி காரிகள் உடனடியாக தலையிட்டு  போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பதே சாமானிய மக்களின் கோரிக்கையாக உள்ளது. -கே.எஸ்.எம்.