உதகை, ஜன.12- நீலகிரியில் ஊரைத் தேடி காவலர் திட்டத்தின் மூலம் கிராம பிரச்சனைகளை தீர்க்க பொதுமக்களை போலீ சார் தேடி செல்வதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரி வித்துள்ளனர். நீலகிரி மாவட்ட காவல் துறையில் உதகை நகரம், ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய 5 உட்கோட்டங்களும், இவற்றின் கீழ் 32 காவல் நிலை யங்களும் உள்ளன. திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங் களை தடுக்கவும், போதைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யவும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் உதவிக்காக காவல் துறை யினரை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில், உதகை ஊரக உட்கோட்டம் தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணிக்கொரை கிராமத்தில் ஊரைத் தேடி காவலர் என்ற திட்ட தொடக்க விழா சனி யன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷா கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து கிராம பொதுமக்களுடன் கலந்துரையாடி, பிரச் சனைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், குற்ற சம்பவங்கள், விபத்துகள், புகையிலைப் பொருட்கள் புழக்கம் உள் ளிட்டவற்றை கட்டுபடுத்த காவல் துறை மட்டும் பணி யாற்றினால் போதாது. மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம். ஒரு காவல் நிலைய எல்லைக் குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் ஒவ்வொரு காவ லர்கள் நியமிக்கப்படுவார்கள். காவலரின் புகைப்படத் துடன் கூடிய தகவல் பலகை கிராமங்களில் அமைக்கப்ப டும். இதில் அவரது பதவி, செல்போன் எண் ஆகியவை யும் குறிப்பிடப்பட்டிருக்கும். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு வந்து பொதுமக்களு டன் கலந்துரையாடுவார்கள். அவர்கள் உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை சேகரிப்பார்கள். அது குறித்த தகவல்களை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவார்கள். கிராம தலைவர்கள், பொது மக்கள், காவலர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கப்பட்டு காவல்துறை மூலம் விழிப்புணர்வு தக வல்கள் பகிரப்படும். பொதுமக்களும் இதில் தகவல் களை பதிவிடலாம். தங்கள் கிராமத்திற்கு நியமிக்கப்ப டும் காவலர்கள் பணியிட மாற்றமாகி சென்றாலும், வேறு போலீசார் நியமிக்கப்படுவார்கள். பொதுமக்கள் அவசர நேரங்களில் இவர்களிடம் மட்டுமின்றி காவல் நிலையத் திற்கும் சென்று புகார்களை அளிக்கலாம். இதே போல் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்க ளுக்கும் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர், என் றார். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சவுந்தரராஜன், தங்கவேல், காவல் துணை கண்காணிப் பாளர்கள் நவீன்குமார், நமச்சிவாயம், வசந்தகுமார் மற் றும் சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கலைச்செல்வி உள் பட பலர் கலந்து கொண்டனர்.