districts

img

விஜயகாந்த் மறைவு: அனைத்து கட்சியினர் ஊர்வலம்

திருப்பூர், ஜன.3- தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவை யொட்டி திருப்பூரில், அனைத்து கட்சிகள் சார்பில் அஞ்சலி  ஊர்வலம் நடைபெற்று உள்ளது. தேமுதிகவின் நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜய காந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த வாரம் சென்னை யில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத் தும் வகையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு துவங்கி  மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த ஊர்வ லத்தில் திமுக, அதிமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, கொமதேக, மநீம உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்ற னர்.  இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு அனைத்து தரப்பினரும் மலர் தூவி அஞ் சலி செலுத்தினர். இதில் தேமுதிக மாநகர் மாவட்டச் செயலா ளர் விசைத்தறி குழந்தைவேல், திமுக மாவட்டச் செயலாள ரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்டச் செயலாளர் முத் துக்கண்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.