districts

விஜயா வாசகர் வட்டத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு

கோவை, மார்ச் 21- கோவை விஜயா வாசகர் வட் டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜெயகாந்தன் விருது எழுத்தாளர் க.மோகன ரங்கனுக் கும், புதுமைப்பித்தன் விருது எழுத் தாளர் ம.காமத்துரை தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து விஜயா பதிப்பகத் தின் மு.வேலாயுதம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது, கோவை விஜயா வாச கர் வட்டம் ஆண்டுதோறும் இலக் கியம், பதிப்புத் துறை ஆளுமை களுக்கு விருதுகளை வழங்கி வரு கிறது. அதன்படி இந்த ஆண்டுக் கான விருதுகளை விஜயா வாச கர் வட்டம் அறிவித்துள்ளது. இதன் படி, இந்த ஆண்டு ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் க.மோகன ரங்கன், கல்லாப்பிழை கவிதை தொகுப்புக்காக தேர்வாகியிருக்கி றார். புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளர் ம.காமுத்துரை கடசல் நாவல் படைப்புக்காகத் தேர்வாகி யுள்ளார். கவிஞர் மீரா விருதுக்கு கவிஞர் பொன்முகலி ஒருத்தி கவி தைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபொழுது என்ற கவிதை தொகுப்புக்காக அவர் தேர்வு செய் யப்பட்டுள்ளார். அதேபோல் பதிப்புத் துறைக் கான விருது பிரிவில் சிறந்த நூல கருக்கான சக்தி வை.கோவிந்தன் விருதுக்கு கோவை மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த புத்தக விற்பனையாளருக்கான வானதி திருநாவுக்கரசு விருதுக்கு கள்ளக் குறிச்சியை சேர்ந்த சரஸ்வதி புத்த கக் களஞ்சியத்தின் வீ.ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். படைப்புக ளுக்கான விருதை தேர்வு செய்யும் குழுவில், எழுத்தாளர்கள் க.வை. பழனிச்சாமி, எம்.கோபாலகிருஷ் ணன், ரவிசுப்பிரமணியன் ஆகி யோர் நடுவர்களாக இருந்து விரு தாளர்களை தேர்ந்தெடுத்தனர்.