districts

img

அரசு அதிகாரியை தாக்கிய ஊராட்சி மன்ற துணைத் தலைவர்

சிதம்பரம், மே 1  கடலூர் மாவட்டம் காட்டுமன் னார்கோவில்  அருகே கண்டமங்கலம் ஊராட்சி தலைவராக இருப்பவர்  தலித் சமுகத்தை சேர்ந்த சிவகாசி கலிய மூர்த்தி.  மிகவும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சரண்யாகுமார் துணைத் தலைவராக உள்ளார்.   இவர் சுமார் ஒரு வருட காலமாக ஊராட்சி மன்ற தலைவரைப் பணி செய்ய விடாமல் ஏதாவது இடையூறு செய்து வருவதாகவும் இதனால் ஊராட்சியில் அடிப்படை பணிகளைக் கூட செய்ய முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்நிலையில்  மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் மேற் பார்வையாளராகக் காட்டு மன்னார்கோயில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச் சந்திரன் கலந்து கொண்டார்.  கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்குகுறித்து துணைத்தலைவர் சரண்யாகுமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்படது. இதில் ஆத்திரமடைந்த துணைத்தலைவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை (தலித்) சாதிபெயரை கூறி தன் காலில் அணிந்திருந்த  செருப்பால் அடித்து ள்ளார். இதை நேரில் பார்த்த  பொது மக்கள்  அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காட்டுமன்னார் கோயில் காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையின்ர் சம்பவ இடத்திற்கு தாம தமாக வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யாகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததால் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

சிபிஎம் கண்டனம்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாத வன் வெளியிட்ட அறிக்கையில்  தலித் சமூகத்தைச் சார்ந்த ரவிச்சந்திரன் என்ற துணை வட்டார வளர்ச்சி அதிகாரியை  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யாகுமார் மூன்று முறை செருப்பால் அடித்துள்ளார்.  இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக் கிறோம். துணை வட்டார வளர்ச்சி அலுவலரைத் தாக்கிய துணைத் தலைவரை மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்என்றும்அவர்வலியுறுத்தி யுள்ளார்.