districts

img

குண்டடத்தில் கால்நடை கிளை மருந்தகங்கள்:

திருப்பூர், மார்ச் 13- குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.6 கோடி மதிப்பீட்டில் கால்நடை கிளை மருந்தகங்கள் உட் பட ரூ.13.78 தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் கள் துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நபார்டு  மற்றும் கிராம சாலைகள்  திட்டத்தின் கீழ் ரூ.13.78 கோடி மதிப் பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.6 கோடி மதிப் பீட்டில் குண்டடம் மற்றும் சங்கரண்டாம்பாளையம் ஆகிய  இடங்களில் கால்நடை கிளை மருந்தகங்களை தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர், திங்களன்று திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை  பராமரிப்புத்துறை) பூகழேந்தி, உதவிக்கோட்டப்பொறியா ளர் (நெடுஞ்சாலைத்துறை) இளம்பூரணம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர் கள் பலர் கலந்து கொண்டார்கள்.