நாமக்கல், மார்ச் 8- தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கால்நடைக ளுக்கு சிகிச்சை அளிக்கும் வகை யில், அவசர ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் செவ் வாயன்று கால்நடைத்துறை சார்ந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ஆய்வுப் பணிகளை மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். இதையடுத்து நாமக்கல் – திருச்சி சாலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகளை யும், அங்கு வரும் பொதுமக்களுக் கான தேவைகளையும் அவர் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து நாமக்கல் லத்துவாடியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி யில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட் டப்பட்ட பண்ணை கட்டிடங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன் திறந்து வைத்தார். இதன்பின் செய்தியாளர்களி டம் அமைச்சர் கூறுகையில், தமிழ கம் முழுவதும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சத விகித இடஒதுக்கீட்டின் கீழ் 39 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள் ளனர். கடந்த ஆட்சிக்காலத்தில் அவசர கோலத்தில் தலைவாசல் பகுதியில் திறக்கப்பட்ட கால்நடை பூங்காவில், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத தால், விவசாயிகள் வருகை என் பது இல்லை. இதற்கான மாற்று நட வடிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருகி றார். கால்நடை துறையில் காலி யாக உள்ள ஆயிரத்து 500 பணி யிடங்கள் தொடர்பாக நீதிமன்றத் தில் வழக்கு நிலுவையில் உள் ளது. அதில் உரிய தீர்வு கண்ட பின் அவை நிரப்பப்படும். கால்நடைத்துறை சார்பில் கிரா மங்களுக்குச் சென்று கால்நடைக ளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 34 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. வரும் நிதிநிலை அறிக்கையில், 234 தொகுதிகளிலும் கால்நடை ஆம்புலன்ஸ் சேவை செயல் படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடு வார், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.பி.சின்ராஜ், ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப் பினர்கள் ராமலிங்கம், பொன்னு சாமி, கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் கே. என்.செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.