கோவை, ஜூலை 16– நொய்யல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளளூர் செல்லும் பாதையில் உள்ள தரைப்பாலம் அடித்து சென்றது. இத னால் போக்குவரத்து துண்டித்து பொதுமக் கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந் துள்ளது. கோவையில் தொடர்ந்து பருவ மழை பெய்து கொண்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் ஆற்றுப்பகுதியில் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பா லான குளங்கள் நிரம்பி வருகிறது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி அணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளளூர் சாலையில் உள்ள தரைப்பாலம் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இதனிடையே கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் வானக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் 8 கிலோ மீட்டர் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் காரணமாக, வெள்ள நீர் கரை புரண்டு ஓடி வருகிறது. இதில் சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தற்கா லிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட் டுள்ளது. மாற்றுப் பாதையான ஓண்டிபுதூர்- பட்ட ணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அந்த சாலையி லும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடி யாத நிலை உள்ளது. மேலும் போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். விரைந்து உயர்மட்ட பாலம் கட்டும் பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.