கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு வாக்கு கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கை மற்றும் பீளமேடு இடைக் குழுக்கள் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் சிபிஎம் தேர்தல் பொறுப்பாளர்கள் தெய்வேந்திரன், அஜய் குமார், மனோகரன், சுரேஷ், ஜோதிமணி, பாண் டியன், டி.மணி, மூர்த்தி, கண்ணகி, பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.