districts

img

கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி

கோவை, அக்.5- கோவையில் 250 வகையான கீரை மற்றும் மருத்துவ மூலி கைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலை துடிய லூர் அடுத்த NGGO காலனியில் உள்ள கிருஷ்ணா கல்யா ணம் மண்டபத்தில் கீரைக்கடை.காம் (KEERAIKADAI.COM) எனும் அமைப்பினர் நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகை கள் கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது. ஞாயிற்றுக் கிழமை (இன்றும்) நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 250  வகை கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் காட்சிப்படுத் தப்பட்டு அவற்றின் மருத்துவக் குணங்கள் விவ ரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கல்லூரி மாணவ, மாணவிகள் கீரைகள் குறித்தும் அவற்றின் மருத்துவ பலன் கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். இந்த கண்காட்சியில் நாம் பெரும்பாலும் உணவில் எடுத் துக் கொள்ளும் கீரைகள் உட்பட பல்வேறு கீரைகள் மூலிகைச்  செடிகள் விஷம் முறிக்கும் மூலிகை செடிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கு பார்வை யாளர்களுக்கு அனுமதி இலவசமாகும். க்யூ ஆர் கோட்  மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பெரும்பா லான பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பள்ளி மாண வர்களும் வருகை புரிந்து கீரைகள் மற்றும் மூலிகை செடி கள் குறித்து அறிந்து கொள்கின்றனர். இதுகுறித்து பேசிய கீரைக்கடை.காம் (KEERAIKADAI.COM) நிறுவனர், ஸ்ரீராம் பிரசாத் பொதுமக்கள் கீரைகள்  மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்ளவே இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு காலத்தில்  500 வகையான கீரைகள் மூலிகை செடிகளை உட்கொண்டு வந்த நிலையில், தற்போது பெரும்பாலானோர் அதனை மறந்து விட்டனர். பொதுமக்கள் தங்களிடம் கீரை மற்றும் மூலிகைச் செடி களை வாங்க விரும்பினால் எங்களது கீரைக்கடை.காம்  இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள லாம். தங்களிடம் இருக்கும் கீரைகள் இயற்கை விவசாயம்  சார்ந்த தயாரிக்கப்படுகின்றது. பூச்சி கொல்லி மருந்துகள் சேர்க்கப்படாமல் உப்பு, மஞ்சள் தூள், மிளகு ஆகிய வற்றையே கொண்டே பூச்சி கொல்லிகளாக பயன்படுத்துவ தாக தெரிவித்தார்.