districts

img

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை: திருப்பூரில் பல்வேறு தரப்பினர் போராட்டம்

திருப்பூர், ஆக. 20 - மேற்கு வங்க மாநிலம் கொல் கத்தாவில் பெண் பயிற்சி மருத்து வர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம் பவத்தைக் கண்டித்து நாடு முழுவ தும் பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு பகு தியாக திருப்பூர் மாவட்டத்திலும் மாணவர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப் பினர் செவ்வாயன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர். சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் மாணவர் சங்க மாநிலத் தலை வர் தெள.சம்சீர் அகமது தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாநில செயற்குழு  உறுப்பினர் ஷாலினி, மாவட்டத் தலைவர் கல்கிராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மணிகண்டன், நிஷா, சுஜித்தா, கண்ணன், விமல் ராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர். உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டம்: திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் உழைக்கும் மகளிர்  ஒருங்கிணைப்புக் குழு, பிஎஸ்என் எல் ஊழியர் சங்கம், ஒப்பந்த  தொழிலாளர் சங்கம், ஓய்வூதியர்  சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில  அமைப்பு செயலாளர் எம்.அண் ணாதுரை தலைமை வகித்தார்.  கிளைச் செயலாளர் ஜெ.அருண்கு மார் வரவேற்றார். ஓய்வூதியர்  சங்க கிளைச் செயலாளர் கே.விஸ்வ நாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ஓய்வூதியர் சங்க மாநில  அமைப்பு செயலாளர் எ.முகமது ஜாபர், ஓய்வூதிய சங்கம் எஸ்.சுப்பி ரமணியம்,  எம்.குமரவேல் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப்  பேசினர். உழைக்கும் மகளிர் ஒருங் கிணைப்புக் குழு இணை கன்வீனர்  லிடியா கிறிஸ்டி சமுதாயத்தில் பெண்களின் அவல நிலையை எடுத்துக் கூறினார். எ.மாலதி நன்றி  கூறினார். முடிவில், மௌன அஞ் சலி செலுத்தப்பட்டது. மக்களைத் தேடி மருத்துவர்கள் பேட்ஜ் அணிந்து கண்டனம்  மக்களைத் தேடி மருத்துவ ஊழி யர்கள் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் பேட்ஜ் அணிந்து பணி யில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட் டத்தில் 100க்கும் மேற்பட்ட மக்க ளைத் தேடி மருத்துவ ஊழியர்கள்,  கொல்கத்தா சம்பவத்துக்கு கண்ட னம் தெரிவித்து பேட்ஜ் அணிந்து 2 நாள் போராட்டத்தை திஙகளன்று துவங்கினர். திருப்பூரில் 2ஆம்  நாளாக செவ்வாயன்று மக்களைத்  தேடி மருத்துவ ஊழியர்கள் பேட்ஜ்  அணிந்து பணியில் ஈடுபட்டனர்.