அன்னூர், ஏப்.4- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அன்னூர் மற்றும் அவிநாசி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், அன்னூர் ஒன்றிய யூனியன் அலுவலகத்தில் முன்பும், அவிநாசியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் இந்த பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.