districts

img

டிஜிட்டல் சர்வே முறைக்கு எதிர்ப்பு விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்

 நாமக்கல், அக்.1- டிஜிட்டல் சர்வே முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  இதர துறைகளின் பணிகளை கிராம நிர்வாக அலுவ லர்கள் மீது திணிக்கக் கூடாது, கூடுதல் பணியாளர்களை நிய மிக்க வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை புறக்க ணிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன் னேற்ற சங்கத்தின்  மாநிலப் பொருளாளர் பாலசுப்பிரமணி யம், மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆர்.லட்சுமி நரசிம்மன், மாவட்டத்தலைவர் முத்துசெழியன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.