ஈரோடு, மார்ச் 28- ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா வில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவு பயணம் கேரளம் நோக்கி செவ்வாயன்று தொடங்கியது. தந்தை பெரியார் தீண்டா மைக்கு எதிராக வீறு கொண்டு போராடிய வைக்கம் போராட் டத்தின் நூற்றாண்டு விழாவினை யொட்டி ஈரோட்டில் இருந்து கேரளாவிற்கு வாகன பேரணி துவங்கியது. இந்த வாகன பேரணி யை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியசைத்து துவக்கி வைத் தார். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்த அழகிரி, தந்தை பெரியாரின் பல்வேறு சமூக புரட்சிகளில் வைக்கம் புரட்சியும் ஒன்றாகும். தமிழகம் எப்போதும் சமூக சீர்திருத்தத்தின் பக்கம் நின்றி ருக்கிறது, அது தேசிய இயக்க மாக இருந்தாலும் சரி, திராவிட இயக்கமாக இருந்தாலும் சரி, பொதுவுடமை இயக்கமாக இருந் தாலும் சரி, அல்லது விடுதலை சிறுத்தை கட்சி போன்ற இயக்கங் களாக இருந்தாலும் சரி. சமூக விடு தலை, மேம்பாடு, சமத்துவம், சமூக நீதி என்பதற்காக இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடியாக இருந்திருக்கிறது. இந்த முன்னோடியாக திகழ் வதற்கு மாபெரும் தலைவர்கள் கால்பட்ட இடம் ஈரோடு. அந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கும், ஈரோட்டிற்கு வந்து வருகை புரிந்து தந்தை பெரியார் அவர்களுக்கு மரி யாதை செலுத்தி விட்டு, வைக்கம் நிகழ்வுகளை நோக்கி செல்வது என கேரளா காங்கிரஸ் முடிவு செய் துள்ளது. அதன்படி கேரளா காங் கிரஸ் வி.டி.பல்ராம் தலைமையில் கேரளாவில் இருந்து காங்கிரசார் வந்துள்ளனர் என கூறினார். இந்நிகழ்வில், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்து சாமி, கேரளாவைச் சேர்ந்த சி. சந்திரன், வழக்கறிஞர் பி.ஏ.சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஆர். விஜயராகவன், சி.முருகேசன், எஸ்.சுப்ரமணியன், நகர செய லாளர் பி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.