திருப்பூர், மார்ச் 23- வருவாய்த்துறை ஊழியர்கள் தற் செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவல கங்கள் ஊழியர்கள் இன்றி வெறுச் சோடி காணப்பட்டது வருவாய்த் துறையில் நான்கு ஆண் டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண் டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை வட் டாட்சியர்களின் பதவி உயர்வு ஆணை களை விரைந்து வழங்க வேண்டும். வருவாய் துறையில் அலுவலக உதவி யாளர் பணியிடங்களை நிரப்ப வேண் டும். 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத் தில் வருவாய் துறை அமைச்சர் தலை மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அர சாணை வெளியிட வேண்டும். இள நிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசா ணையை வெளியிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூ ரிலும் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரண மாக மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் வருவாய் துறை ஊழியர்கள் இல்லா மல் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. உடுமலை இதேபோல் வியாழனன்று உடு மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் தற் செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரண மாக உடுமலை வட்டாட்சியர் அலு வலகம் வெறிச்சோடி காணப்பட்டது.