மேட்டுப்பாளையம், நவ.8- கனமழை காரணமாக மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகளால் கடந்த ஐந்து நாட்களாக ரத்து செய் யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலைரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பய ணிகளையும் பெரிதும் கவரும் இம் மலை ரயில் பாதை செங்குத்தான மலை காட்டின் நடுவே செல்வதால் மழை காலங்களில் இதன் தண்டவாள பாதை யில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடை பட்டு நிற்கிறது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி அதிகாலை பெய்த தொடர் கனமழை காரணமாக மண் சரிவுகள் ஏற்பட்டு ராட்சத பாறைகள் மலை ரயில் பாதை யில் உருண்டு விழுந்தன. இதனால் கல்லாறு மற்றும் ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையை இதன் தண்ட வாள பாதை மண்ணில் புதைந்து சேத மாகின. இதனால் கடந்த 3 தேதி முதல் 7 தேதி வரை என ஐந்து நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப் பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவுகளை சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து விட்டதாலும் மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாலும் மேட்டுப்பாளை யம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து மீண்டும் வெள்ளியன்று துவங்கியது. மீண்டும் எங்கேனும் மண் சரிவுகள் ஏற்பட் டுள்ளதா என ரயில்வே ஊழியர்கள் முழு ஆய்வு நடத்தியதால், சுமார் 20 நிமி டங்கள் தாமதமாக காலை 7,30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை நோக்கி நீலகிரி மலை ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் ஏற்கனவே முன் பதிவு செய்து காத்தி ருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியு டன் மலை ரயிலில் பயணம் மேற்கொண் டனர்.