உதகை - தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து நாசம்
உதகை, மார்ச் 11- உதகையில் திடீரென எரிந்த தீவிபத்தில ஐந்து குடிசைகள் எரிந்து நாசமானது. நீலகிரி மாவட்டம், உதகை மேரீஸ் ஹில் பகுதியில் ரட்டன் டாடா ஓய்வு விடுதி அமைந்து உள்ளது. இந்த விடுதியின் பின்புறம் சுமார் 50 குடிசை வீடுகள் உள்ளன. இந்தப் பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலுக்கு செல் கின்றனர். இந்நிலையில், சனியன்று அங்குள்ள குடியிருப்புகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ அங்கிருந்து குடிசை வீடு களுக்கும் பரவியது. குடிசை வீடுகள் பலகை மற்றும் தக ரத்தால் அமைந்திருந்ததாலும், காற்றின் வேகம் சற்று அதிக மாக இருந்ததாலும் தீ வேகமாக பரவியது. இதனால், அப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையி னருக்கு தகவல் அளித்தனர். மேலும், மின் வாரிய ஊழியர்கள் அந்த பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்தனர். தீ பரவியதை அடுத்து அப்பகுதி மக்கள் குடிசை வீடுகளி லிருந்த மின் சாதனங்கள், எரிவாயு சிலிண்டர்கள் ஆகிய வற்றை வேகமாக அப்புறப்படுத்தினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், பகுதிக்குள் வாகனம் செல்ல முடியவில்லை. தீயணைப்பு வாகனம் செல்ல முடி யாததால், பொதுமக்களுடன் இணைந்து குடங்கள் மற்றும் வாளிகளில் தண்ணீர் நிரப்பி, தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். ஒரு வழியாக மாற்று ஏற்பாடு செய்து இறுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து முழுவதுமாக தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை தீயணைப்புத்துறை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் அந்த பகுதியில் வசிக்கும் ரேணுகா, பிரேமா, சாந்தி, லதா மற்றும் அருள்தாஸ் ஆகியோரின் வீடுகள் தீப் பிடித்து எரிந்தது. வீட்டிலிருந்த விறகுகளில் தீ பரவியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ‘வீடுகளில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாச மாகி விட்டன. ஒரு வீட்டில் நாய் குட்டி ஈன்று இருந்தது. நாய் மற்றும் குட்டிகள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது. அன்றாட கூலிவேலை செய்து பிழைக்கும் இவர்களின் ஒரே ஆதாரமாக இருந்த குடிசை வீடுகள் எரிந்து நாசமானது கண்டு அம்மக்கள் அதிர்ச்சியை உறைந்துள்ளனர். '
கிரைன் சக்கரம் ஏறி முதியவர் பலி
கோவை, மார்ச் 11- கிரைன் சக்கரம் ஏறி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை - சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த முதியவர் மருதாச்சலம் (70). இவர் ஆடு மேய்த்து வருகிறார். இந்நிலையில், இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலை யில் நடந்து சென்றுள்ளார். அப்போது, வேல்முருகன் என்பவர் அந்த சாலையில் கிரேன் இயந்திரத்தை ஓட்டி வந்துள்ளார். சாலையில் அந்த கிரேன் திரும்பும் பொழுது நடந்து சென்ற முதியவரின் மேல் இடித்தது. இதில் நிலை தடு மாறி கீழே விழுந்தார். பின்னர் அந்த வாகனத்தின் டயர் அவர் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த மருதாச்சலம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, கண்காணிப்பு கேமரா பதிவான கோர காட்சிகள் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
தருமபுரி, மார்ச் 11- சிறுமியைக் கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த இளை ஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப் பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஞானவேல் (29), கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி இரவு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதன் புகாரின் பேரில், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஞானவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மகளிர் விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பு வழக்கு ரைஞராக கல்பனா ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை வெள்ளியன்று முடிவுற்றது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஞானவேலுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
பெண் தொழிளாலர்களிடம் வாய்த்துடுக்கு: இந்து முன்னணி நிர்வாகி கைது
அவிநாசி, மார்ச் 11 - அவிநாசி அருகே காளிபாளையம் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளிகளிடம் தகாத வார்த்தை யில் பேசிய இந்து முன்னணி பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் காளிபாளையம் ஊராட்சியை சேர்ந்த சந்தியா (30) மற் றும் அதே பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் குட்டையை தூர்வா ரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புல்லட் வண்டி யில் அங்கு வந்த பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பட்டுராஜ் (39) வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம், மரத்தடி நிழலில் படுத்துக் கொண்டு சம்பளம் வாங்கி செல்கிறீர்களா என்று தகாத வார்த்தை பேசி உள்ளார். மேலும், வேலை ஒழுங் காக செய்யவில்லை என்றால் தனது புல்லட் வண்டியை ஏற்றி கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து வேலை செய்வதை இழிவுபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பட்டுராஜை பெண் தொழிலாளர்கள் பிடித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து, சந்தியா அளித்த புகாரில் பட்டுராஜ் மீது தகாத வார்த்தையில் பேசியது மற்றும் கொலை மிரட்டல் விடுத் தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பெருமா நல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர்.
அரசு பணியாளர்களுக்கு தமிழ் ஒருங்குறிப் பயிற்சி
திருப்பூர், மார்ச் 11 - திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார் பில் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவின் இரண்டாம் நாள் நிகழ் வாக வெள்ளியன்று கணினித்தமிழ் மற்றும் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்து அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கடந்த 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெள்ளி யன்று இரண்டாம் நாள் நிகழ்வில், திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் அரசுப் பணியாளர்க ளுக்கு கணினி தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு அலுவ லங்களில் தயாரிக்கப்படும் கோப்புகளில் மருதம் ஒருங்குறி யில் கணினித் தட்டச்சு செய்வது தொடர்பாகவும், ஒருங்குறி பயன்பாடு குறித்தும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறை உதவிப் பேராசிரியர் த.சத்தியராஜ் பயிற்சி அளித்தார். தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் பெ.இளங்கோ இந்நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். இப்பயிற்சியில் கலந்து கொண்ட அரசுப் பணியா ளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பங்கேற்பு சான்றி தழ் வழங்கப்பட்டது.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:32.65/60அடி நீர்வரத்து:778கன அடி
வெளியேற்றம்:920கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்:52.53/90அடி.நீர்வரத்து:17கனஅடி
வெளியேற்றம்:104கனஅடி
உடுமலையில் இலக்கிய கூட்டம்
திருப்பூர், மார்ச் 11 – இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து திருப்பூரில் மாணவ, மாணவி களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சனியன்று திருப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கோவை மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குநர் பரத்வாஜ், துணை இயக்குநர் மதன்லால் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பழைய முறையில் உடற்தகுதி தேர்வு நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படுவோர் எழுத்துத் தேர்வுக்கும் பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு சேர்க்கப்படுவர். தற் போது முதலில் எழுத்துத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறு வோரில் உடல் தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனை செய் யப்படுகிறது என்று இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரி விக்கப்பட்டது. இது தொடர்பாக பலர் சந்தேகங்கள் கேட்டதற்கு ராணுவ அதிகாரிகள் பதில் கூறினர். மாணவ, மாணவிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
கந்துவட்டி கொடுமை: தம்பதி தற்கொலை
சேலம், மார்ச் 11- கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து இறந்து போன கணவரின் உடலை பார்த்த மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம்-மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவர் 5 ரோடு தொழிற்பேட்டை யில் லேத் பட்டறை வைத்துள்ளார். இவருடன் மகன் பாபுவும் வேலை செய்து வருகிறார். தொழிலுக்காக தங்கராஜ், ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். கடந்த 2 மாதமாக வட்டித் தொகையை கொடுக்கவில்லை. பணம் கொடுத்த வர்கள் நெருக்கடி கொடுத்ததுடன் மிரட்டிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த தங்க ராஜ், கடந்த 8ஆம்தேதியன்று, சூரமங்கலம் அடுத்துள்ள பூனைக்கரட்டில் மதுவில் விஷத்தை கலந்து குடித்தார். சிகிச் சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழனன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இதையடுத்து அவரது உடலை அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் உள்ள அறையில் வைத்திருந்தனர். அவரது உடல் அருகே மனைவி விஜயா (58) கண்ணீருடன் அமர்ந்திருந்தார். வெள்ளியன்று காலை அங்கிருந்த அறைக்கு சென்ற விஜயா, யாரும் எதிர்பாராத நேரத்தில் சேலையில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் ஓடிவந்து அவரை கீழே இறக்கினர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பாபு, கோபி என்ற 2 மகன்களும், சபிதா என்ற மகளும் உள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரில், வட்டிக்கு பணம் கொடுத்த ரெட்டியூரை சேர்ந்த ராஜா மற்றும் சித்ரா ஆகியோரை போலீசார் கந்துவட்டி சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மூலிகை தோட்டம் அமைக்க மானியம்
ஈரோடு, மார்ச் 11- வீடுகள், மொட்டை மாடி மற்றும் காலியிடங்களில் மூலி கைத் தோட்டம் அமைக்க 50 சதவிகித மானியம் வழங்கப் படுகிறது. ஈரோடு மாவட்ட தோட் டக்கலைத்துறை உதவி இயக்குநர் வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதா வது, மூலிகைத் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறையிலிருந்து செடிகள், விதைகள், பைகள், உரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப் படுகிறது. பிரண்டை, கற்பூர வள்ளி, வல்லாரை, நில வேம்பு, தூதுவளை, ஆடு தொடா இலை, பசலை கீரை, லெமன் கிராஸ், வெட்டிவேர் உள்ளிட்ட மூலிகைச் செடி கள் வழங்கப்படுகின்றன. 50 சதவிகித மானியத்தில் இத் தொகுப்பை பெற்று தங்கள் வீட்டிலேயே மூலிகை தோட் டம் அமைக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.