ஆட்டை வேட்டையாடிய புலி உதகை, டிச. 15- நீலகிரி மாவட்டம், கூட லூர் தாலுகாவில் உள்ள கள்ளஞ்சேரி கிராமத்தில் ஆட்டை அடித்து புலி கொன் றதால் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. கள்ளஞ்சேரி கிராமத் தில், வனவிலங்குகள் அடிக் கடி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். புதனன்று ஆடுகளை அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலையில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென புலி ஒன்று வந்து ஆடு ஒன்றை அடித்து கொன்று, வாயில் கவ்வி இழுத்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறிது தூரம் சென்றதும் ஆட்டை அங்கு போட்டு விட்டு புலி வனத் திற்குள் சென்று விட்டது. இதுகுறித்து உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டனர். ஏற்க னவே கடந்த வாரம் தெப்பக்காட்டை சேர்ந்த ஒருவரை புலி தாக்கி அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே வனத்துறையினர் புலியை கண்காணித்து, அதனை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்னர்.