கோவை, ஏப்.13– பட்டியலின மக்கள் மீது தாக்கு தல் அதிகரித்து வரும் நிலை யில், வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என குடிமக்கள் விழிப்பு கண்காணிப்பு குழு வலியுறுத்தி யுள்ளது. பட்டியல் சாதிகள் மற்றும் பட்டி யல் பழங்குடியினர் (வன்கொடு மைகள் தடுப்புச் சட்டம்) 1989 தமிழகத்தில் அமலாக்கப்படு வதை கண்காணிப்பதற்கு தமிழ கத்தின் அனைத்து மாவட்டங்களி லும் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு (சிவிஎம்சி) களப்பணியாற்றி வருகிறது. இவ் வமைப்பினர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை திரட் டியுள்ளனர். இதுகுறித்து வியாழ னன்று கோயமுத்தூர் பத்திரிகை யாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, இவ்வமைப்பின் மாவட்ட தலைவரும், வழக்கறி ஞருமான மு.ஆனந்தன் கூறுகை யில், குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு வன் கொடுமை தடுப்பு சட்டத்தை அம லாக்க செயல்பட்டு வருகிறது. அந்த சட்டத்தின்படி வன்கொடு மையால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவா ரணம் வழங்க வேண்டும். ஆனால், வழங்கப்படுவதில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட் சியர் அலுவலகங்கள் தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழான கேள்விக்கு இதுகுறித்த ஆவணங் கள் ஏதும் இங்கு இல்லை என் கிற பதிலே பெரும்பாலும் தரப்படு கிறது. வன்கொடுமையால் பாதிக் கப்பட்டவர்களின் புனர்வாழ் விற்கு மாவட்ட நிர்வாகமோ, நீதியை பெற்றுத்தர காவல் துறையோ போதுமான அக்கறை செலுத்துவதில்லை. கோவை மாந கரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு 29 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. ஆனால், 10 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் (புறநகர்ப் பகுதி யில்) 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டும், 12 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்தான் கொடுக்கப்பட்டுள் ளது.
தற்போது கோவை மாவட்ட முதன்மை நீதி மன்றத்தின் விசார ணையில் கோவையில் 152 வழக்கு கள் என தமிழகத்தில் 5916 வழக்கு கள் நிலுவையில் உள்ளது. அதே போல் இந்த வழக்கு விசாரணை களை 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். கோவை மாநகரில் 9 வழக்குகளும்,புறநகரில் 9 வழக்கு களும் நிலுவையில் உள்ளது. வன்கொடுமையால் பாதிக் கப்பட்டவர்கள் வழக்குகளை விரைவாக விசாரித்து உரிய இழப் பீடுகள் கொடுக்க வன்கொடுமை சிறப்பு நீதிமன்றங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். பட்டி யலின மக்கள் மீது வன்கொடுமை அதிகரித்து வருகிற நிலையில், கோவை உள்ளிட்ட தென் மாவட் டங்கள் மற்றும் வட மாவட்டங் களில் சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும். அதே போல் வன்கொடுமை வழக்கு களை சட்டத்திற்குட்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந் தஸ்த்தில் உள்ளவர்கள் விசாரிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், பெரும்பாலான வழக்கு களை கீழ்மட்ட காவலர்கள் விசா ரித்து கொடுக்கும் அறிக்கைக்கு அதிகாரிகள் கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பும் நிலையே உள் ளது. பாலியல் பலாத்காரம் ஆகிய வற்றிற்கு கொடுக்கும் முக்கியத் துவம் வன்கொடுமை வழக்குக ளுக்கு கொடுக்கப்படுவதில்லை.
இவ்வழக்குகளில் புலன் விசா ரணை தரம் குறைவாக உள்ள தால், உண்மை குற்றவாளிகள் எளி தில் தப்பிக்கின்றனர். பாதிக்கப் பட்ட பட்டியலின மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை. கோவையில் கடந்த 1 வருடமாக வன்கொடுமை விழிப்புணர்வு கூட்டம் 2 முறை நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண் டும் தமிழகத்தில் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் பட்டிய லின பழங்குடி சிறுமிகள் பாதிக்கப் பட்ட வழக்குகளில் போக்சோ வழக்கு 135 உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. போக்சோ வழக் கில் எஸ்டி பிரிவுகள் பதிவு செய் யப்படாததால், நிவாரணங்கள் சரிவர வழங்கப்படுவதில்லை. இம்மக்களுக்கு உரிய நீதி கிடைத் திட தமிழக அரசு துரித நடவ டிக்கை எடுத்திட வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித் திட சிறப்பு நீதிமன்றங்கள் அமைப் பது, உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு சென்றடையாத மக்க ளுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வா கம் மேற்கொள்ள வேண்டும் என் பன உள்ளிட்ட நடைமுறைகளை தமிழக அரசு கண்காணித்து உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண் டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக, இந்த செய்தியா ளர் சந்திப்பின்போது, குடிமக்கள் விழிப்பு கண்காணிப்புக்குழுவின் மாவட்ட செயலாளர் கணேசன், நிர்வாகி கஸ்தூரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.