districts

img

உடுமலை அருகே விவசாயத்தை பாதிக்கும் காகித ஆலையை மூட வலியுறுத்தல்

திருப்பூர், ஜன.25-  உடுமலையை அடுத்த பள்ளபா ளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவ தால் அதனை உடனடியாக மூடக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடும லையை அடுத்த பள்ளபாளையம் கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக தனியார் காகித ஆலை இயங்கி  வருகிறது. இங்கு பல்வேறு பகுதி களில் இருந்து சேகரிக்கப்படும் கழி வுகளை மறுசுழற்சி செய்து காகிதம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கழிவுகளை மறுசுழற்சி செய்யும்போது வெளியேறும் கரும் புகையால் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. அதுமட்டு மின்றி தொழிற்சாலையில் இருந்து  வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.

 இந்த பகுதியினருக்கு விவசா யமே பிரதான தொழிலாக இருந்து வருவதால் இந்த தொழிற்சாலை யில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் கரும்புகையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் பல்வேறு நோய் களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரி யம் இந்த ஆலையை ஆய்வு செய்து  உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் பல் வேறு முறை மனு அளிக்கப்பட்டது.இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  இதையடுத்து திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட் டோர் செவ்வாயன்று முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் காகித தொழிற்சா லையை உடனடியாக மூடக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பி னர்.