districts

img

சட்டவிரோதமாக மண் அள்ளிய அரசு அதிகாரி: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு, ஜன.22- சத்திமங்கலம் அருகே அரசு  நிலத்தை அபகரித்து சட்டவிரோத மாக மண் அள்ளிய கிராம நிர் வாக அலுவலர் மீது சட்டப்படி யான நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி விவசாயி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் வட்டம், வரதபாளையம் கிராமம், க.ச.எண்.110-ல் பொதுப்பணித்துறைக்கு சொந்த மான 2.50 ஏக்கர் குட்டை நிலம் உள் ளது. இந்த நிலத்தை செல்லி பாளையம் கிராம நிர்வாக அலுவ லராக பணிபுரிந்து வரும் ஆர்.முரு கேசன் என்பவர் ஆக்கிரமித்து, 500க்கும் மேற்பட்ட லோடு மண்ணை எந்த அனுமதியும் பெறா மல் சட்டவிரோதமாக எடுத்துள் ளார். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மேற்படி கிராம நிர்வாக அலுவலர் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கலம் வட்டாட்சியரி டம் மனு அளித்தனர். ஆனால்,  அம்மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கோபிசெட்டிபா ளையம் கோட்டாட்சியரிடம் முறை யிட்டனர். கோட்டாட்சியரும் நட வடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை விசாரித்த நீதிபதி கள், கோபி கோட்டாட்சியர் கள ஆய்வு செய்து விசாரணை அறிக் கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலை யில், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், அவருடைய தாயார் பெயரில் தனது கணவர் நீண்ட காலமாக அந்த நிலத்தை அனு பவித்து வருகிறார். அவருக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட உரிமையில் நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்துள் ளார். இதற்கிடையில் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் முரு கேசனை பணியிட மாற்றம் செய்ய  மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது.  சாதாரணமாக ஒரு விவசாயி தன்னுடைய சொந்த நிலத்திற்கு மேம்பாட்டிற்காக மண் எடுக்கும் போது வருவாய் துறை அபராதம் விதிப்பது, காவல்துறையை வைத்து வாகனத்தை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், 500க்கும் மேற்பட்ட லோடு மண்ணை அள்ளிய அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அப்பகுதி விவசாயி களை கலக்கம் செய்துள்ளது. எனவே, கிராம நிர்வாக அலு வலரை காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது. மேற் படி நிலம் தடுப்பணை ஆக உள்ள தால் அதை நில அளவை செய்து  அடிக்கல் நாட்டி தூர்வார நடவ டிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை அபகரிக்கும் முறை யில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலு வலர் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் வழக்கில் வருவாய்துறை ஆஜராகி வழக்கை நடத்த வேண்டும். என வலியுறுத்தி சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் பி.கணேஷ்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செய லாளர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார், தாலுகா செயலாளர் வாசு தேவன், குத்தியாலத்தூர் ஊராட்சி  முன்னாள் தலைவர் க.இரா.திருத் தணிகாசலம் உட்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்ட னர்.