districts

img

பாலக்கோடு ஆலையில் கரும்பு அரவையை துவங்க வலியுறுத்தல்

தருமபுரி, நவ.5- பாலக்கோடு கூட்டுறவு சர்க் கரை ஆலையில் 2024 - 2025  ஆம் ஆண்டிற்கான கரும்பு அர வையை துவங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக் கோட்டில் மாவட்ட கூட்டுறவு சர்க் கரை ஆலை இயங்கி வருகிறது.  இந்த ஆலைக்கு சுற்றுவட்டார பகு தியிலிருந்து கரும்பு அரவைக்கு வரும். இந்த ஆலையின் கரும்பு  சாகுபடி பரப்பு 800 ஏக்கர் ஆகும்.  கரும்பு பயிரில் வேர்புழு தாக்குத லால் மகசூல் குறைந்துள்ளது. இத னால் நடப்பாண்டு கரும்பு அரவை  நடக்காது என நிர்வாகம் கூறியதாக  விவசாயிகளும், ஆலையின் தொழி லாளர்களும் தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கத்தினரும் தெரி வித்தனர். இதனையடுத்து தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை  பணியாளர் சங்க (சிஐடியு) செயலா ளர் எம்.மாது, தலைவர் எம்.மாதே சன், துணைத்தலைவர் ஆர்.பாவேல், துணைச்செயலாளர்கள் சி.சேகர், பி.பகத், பொருளாளர் சங் கரதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலக மேலளார் கதிர வனை நேரில் சந்தித்து பேசினர். மேலும், சர்க்கரை இணை இயக்கு நரிடம் அலைபேசி மூலம் கோரிக் கைகள் குறித்து பேசினர். இதன்பின் கரும்பு விவசாயி கள் சங்க பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் கூறுகையில், தருமபுரி  மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் கரும்பு கள அலுவலர்கள் குறைவாக உள்ளனர். எனவே, கரும்பு விவசாயிகளின் நலன் கருதி  கள அலுவலர்கள் அதிகப்படுத்த வேண்டும். ஆலையில் பணிபுரியும்  தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இங்கு பணிபு ரியும் தினக்கூலித் தொழிலாளர்க ளுக்கு மற்ற ஆலையில் வழங்கு வது போல், நாளொன்றுக்கு ரூ.700  ஊதியம் வழங்க வேண்டும். பணி யிடங்கள் காலியாகும் போது தினக் கூலி தொழிலாளர்களை நிரந்தப்ப டுத்த வேண்டும். கரும்பு பயிர் நோய்  தாக்குதலுக்குள்ளாகி, விவசாயி களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆலை நிர்வாகம் காப்பீடு திட்டத்தின் மூலம் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு நடவு கரும்பு ஏக்கருக்கு ரூ.25  ஆயிரம் மானியம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும்,  இந்தாண்டு ஆலையில் கருப்பு  அரவைக்கு அழைக்கப்படும் என  அதிகாரிகள் உறுதியளித்துள்ள தாக, அவர் தெரிவித்தார்.