districts

img

கரும்பு பூ பூத்ததால் அரவையை துவங்க வலியுறுத்தல்

தருமபுரி, டிச.3- பாலக்கோடு பகுதியில் கரும்பில் பூ பூத்ததால் உடனடியாக சர்க்கரை  ஆலை அரவையை துவங்கமாறு கருப்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி மாவட்டம்,  பாலக்கோட் டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இதுவும் ஒன்றாகும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை 4 லட்சம் டன் வரை சர்க்க ரையை உற்பத்தி செய்து தேசியள வில் நற்சான்று பெற்றுள்ளது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கரும்பு அரவை பணி நடைபெறும். இந்த கரும்பு ஆலைக்கு பாலக் கோட்டை சுற்றியுள்ள மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம் பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, சாமனூர், காரிமங்கலம், பெரியாம் பட்டி, தும்பலஅள்ளி போன்ற பகுதி களில் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் கரும்பை பதிவு செய்து ஆலைக்கு வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், தொடர் பருவ மழை பெய்ததால் அதிகளவில் கரும்பு பயிர் விவசாயம் செய்தனர். தற் போது கரும்பு அறுவடைக்கு தயா ரான நிலையில், சர்க்கரை ஆலை யில் அரவை பணி தொடங்கப்பட வில்லை.  இதனால் அறுவடைக்கு தயாரான கரும்பு பூ பூக்க தொடங்கி விட்டது. இதனால் மகசூல் பாதிக்கப் பட்டதுடன், கரும்பு காய்ந்து எடை குறைந்து நட்டம் ஏற்படும் நிலை உள்ளது.  எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும்  உரிய நடவடிக்கை மேற் கொண்டு சர்க்கரை ஆலையில் அரவை பணியை துவங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.