தருமபுரி, ஆக. 28, கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழி லாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் வேலையை அங்கிக ரித்து, ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அடையாள வேலை அட்டை வழங்க வேண்டும், கரும்பு வெட்டும் தொழி லாளர்கள் இருபாலருக்கும் சீருடை காலணி இலவசமாக வழங்க வேண்டும், கரும்பு வெட்டும் போது ஏற்படும் விபத்து களுக்கு மருத்துவ செலவை ஆலை நிர்வாகம் செலுத்த வேண்டும், குழு காப்பீடு திட்டத்தை அமுல்படுத்தவேண்டும், கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே வழங்க வேண் டும், தனி நாலவாரியம் அமைக்க வேண்டும், பாம்பு கடித்து மரணமடைந்தால் குடும்ப நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரூர் ரவுண்டானா அருகில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க நிர்வாகி கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், மாநிலத் தலைவர் ஈ.கே.முருகன், மாநில பொருளாளர் சொக்கநாதன், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளர் எம்.முத்து, ஒன்றியச் செயலாளர் கே.குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.