districts

ஜல்லி எம் சாண்ட் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

திருப்பூர், ஜூலை 15 – ஜல்லி, எம்சாண்ட் விலை உயர்வை  குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழ்நாடு புதுச் சேரி அனைத்து பொறியாளர்கள் சங்கங் களின் கூட்டமைப்பின் ஏழாவது மண்டல  செயற்குழு கோரியுள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து பொறியாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பின் ஏழாவது மண்டல செயற் குழு கூட்டம் வெள்ளியன்று திருப்பூர்  வித்யா கார்த்திக் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. மண்டல தலைவர் டி.தமிழ்ச்செல் வன் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் திருப்பூர் சங்க தலைவர் எஸ்.ஜெய ராமன் வரவேற்றார். மண்டல செயலா ளர் எஸ்.ஸ்டாலின்பாரதி செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலத் தலைவர் டி.ராஜேஷ், மாநில துணைத் தலைவர் விஜயபானு, மாநில மக்கள் தொடர்பு அலுவலர் சரவணராஜா, மாநில உதவி தலைவர் அறிவழகன், மாநில முன்னாள் தலைவர் சி.தில்லை ராஜன், மாநில முன்னாள் பொருளாளர்  எஸ்.பொன்னுசாமி மற்றும் ஏழாவது மண்டலத்தைச் சார்ந்த திருப்பூர், கோய முத்தூர், உடுமலைப்பேட்டை, தாராபு ரம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காங்கேயம் பொறியாளர்கள் சங்கங்க ளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்பூர் சங்க செயலாளர் ஆர்.பிர காஷ் நன்றியுரை கூறினார். கூட்டத்தில்  கனிம வளங்கள் வெளி மாநிலங்க ளுக்கு கொண்டு செல்வதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லி, எம்சாண்ட் விலை உயர்வை குறைப் பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க  வேண்டும். தரம் இல்லாத எம்சாண்ட் விற்பனை செய்வதை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிமெண்டை அத்தியாவசிய விளைபொருட்கள் பட் டியலில் கொண்டு வர நடவடிக்கை வேண்டும். அனைத்து ஊராட்சி அமைப் புகளிலும் கட்டட அனுமதி தருவதற்கு  பொறியியல் படித்த அதிகாரிகளை நிய மிக்க வேண்டும். மனை வரன்முறையை  மீண்டும் அமல்படுத்த வேண்டும். கட்டட  அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல் களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கோயம்புத்தூர் சங்கத் தலை வர் ராமகிருஷ்ணன் உடுமலை சங்கத்  தலைவர் கோபாலகிருஷ்ணன் தாராபு ரம் சங்கத் தலைவர் முருகானந்தம் பொள்ளாச்சி சங்கத் தலைவர் ஜவகர் பாண்டியன் மேட்டுப்பாளையம் சங்கத்  தலைவர் கார்த்திகேய பிரபு காங்கேயம்  சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட  ஏழாவது மண்டலத்தை சார்ந்த நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.