தருமபுரி, ஆக.8- வத்தல்மலை, சின்னாங்காட்டிலிருந்து பெரியூ ருக்கு செல்லும் கற்கள் பெயர்ந்து காணப்படும் சாலையை, தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ‘ஏழைகளின் மினி ஊட்டி’ என்று அழைக்கப்படும் தருமபுரி மாவட்டத்திலுள்ள வத்தல்மலை பொதுமக்க ளின் சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. தருமபுரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வத்தல்மலை யானது கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்று எப்பொழுதும் மாறுபட்ட குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது. வத்தல்மலைப்பகுதியில் தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கொண்டகரஹள்ளி பஞ்சாயத்துக் குட்பட்ட சின்னாங்காடு, ஒன்றியக்காடு, மண்ணான்குழி, பெரியூர், குழியானூர், நாய்க்கனூர், கொட்டலாங்காடு ஆகிய 7 குக்கிராமங்களும், மொரப்பூர் ஊராட்சி ஒன்றி யம், சுங்கரஅள்ளி ஊராட்சிகுட்பட்ட பால்சிலம்பு என்ற குக்கிராமமும் உள்ளன. வத்தமலைப்பகுதியில் 4 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் சின்னங்காடு பகுதியில் இருந்து பெரியூர் பகு திக்கு செல்வதற்காக பழங்குடியினர் நலன் சார்பில், ரூ.45 லட்சம் மதிப்பில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ஜல்லிக்கற்களுடன் சேர்ந்த மண் சாலை அமைக்கப் பட்டது. பெயரளவிற்கு அமைக்கப்பட்ட இச்சாலை அவ் வப்போது பெய்த மழையின் காரணமாக ஜல்லிக்கற்கள் முழுவதும் பெயர்ந்து சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறியுள்ளது. மழைக்காலங்களில் சில இடங்களில் சாலையில் சகதிகள் ஏற்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல் வோர் சேற்றில் வழுக்கி விழுந்து விபத்திற்குள்ளாகி வரு கின்றனர். இதனால் பெரியூரில் இருந்து சின்னாங்காங டிற்கு செல்ல மூன்று கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், ஒரு கிலோமீட்டர் மண் சாலையை, தார்ச்சாலையாக புதுப் பித்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.