மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தல்
நாமக்கல், ஜூன் 5- அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை விரைந்து கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில், இந்திய மாணவர் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் தே.சரவணன், மாவட்ட தலை வர் மு.தங்கராஜ் ஆகியோர் மனு அளித்தனர். அம்மனு வில், மாவட்டத்தில் அரசு கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் பல மாவட்டங் களிலிருந்து மாணவர்கள், நாமக்கல் மாவட்ட அரசு கல்லூரி களை தேர்வு செய்து படித்து வருகின்றனர். அவர்களில் பல ரும் விடுதியில் சேர விண்ணப்பித்து, கடந்தாண்டுகளில் விடுதி யில் இடம் கிடைக்காத காரணத்தால் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பயில வேண்டிய நிலைமை ஏற்பட்டு வருகி றது. எனவே அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிக ரிக்க வேண்டும். விண்ணப்பித்த அனைத்து மாணவர்க ளுக்கு விடுதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ராசிபுரம் அருகே உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறையில் பணியாற்றி வந்த பேராசிரியர் சுந்தரமூர்த்தி மீது, அதேகல்லூரியை சேர்ந்த மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் என காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் மீது ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சம்பந்தப் பட்ட பேராசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப் பட்டது.
ஆனால், இதுவரையும் அவரை காவல்துறை கைது செய்யாமல் இருக்கின்றது. எனவே, தலைமறைவாக உள்ள பேராசிரியரை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண் டும். பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற் றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று ராசிபுரத்தில் உள்ள அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி விளையாட்டு மைதானத் தில் காலையும், மாலையும் பொதுமக்கள் உடற்பயிற்சி மேற் கொண்டு வருகின்றனர். தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேல் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளது. இதனால் விளையாட்டு மைதானத்தில் சிலர் புகுந்து, மது அருந்து வது, கண்ணாடி பாட்டில்களை உடைத்து எரிந்து வருகின்ற னர். இந்நிலையில், கோடை காலம் முடிந்து ஜூன் 12 ஆம் தேதியன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் பாது காப்பு கருதியும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பாதுகாப்பையும் கருதி உடனடியாக இடிந்த நிலையில் இருக்கும் சுற்றுச்சுவரை சரி செய்து, புதிய சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
கோவை தனியார் மருத்துவமனையில் 81 செவிலியர்களுக்கு வாந்தி, மயக்கம்
கோவை, ஜூன் 5- தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் கள் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனை யில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி செவி லியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி பல செவிலியர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா மருத் துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக சுகா தாரத்துறையினர் கூறியதாவது: 3 நாட்கள் நடைபெற்ற பரிசோதனை முகாமில் மொத்தம் 81 செவிலியர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மருத்து வமனையில் குடிநீர் வழங்கும் இடங்களில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். இதேபோல, அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளும் ஆய்வுக்கு உட் படுத்தப்பட உள்ளன. ஆய்வின் முடிவில்தான் எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவரும்’’ என்றனர்.
கோவையில் மனித சங்கிலி
கோவை, ஜூன் 5- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் திங்க ளன்று, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, “நெகிழி பயன் பாட்டை தவிர்ப்போம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி மனித சங்கிலி நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் ரா.தமிழ்வேந்தன், சுற்றுச்சூழல் அறிவியல் துறை தலைவர் மகேஸ்வரி ஆகியோர் கொடிய சைத்து தொடங்கி வைத்தனர். இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று கோவை பந்தய சாலையில், கோவை மாநக ராட்சியுடன் இனைந்து, ராணுவ வீரர்கள் நெகிழியை சேகரிக் கும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில், மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மின்கம்பம் சேதம்
உதகை, ஜூன் 5- கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந் நிலையில், சனியன்று இரவு கோத்தகிரி வட்டாட்சியர் அலு வலக வளாகத்தில் உள்ள ராட்சத பைன் மரம் ஒன்று நிலத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக வேர்கள் பிடிப் பில்லாததால், சரிந்து சாலை யின் குறுக்கே விழுந்தது. மின் கம்பிகள் மீது மரக்கிளை கள் விழுந்ததால் 2 மின்கம் பங்கள் சாய்ந்தன. இதனால் ஞாயிறன்று மாலை வரை அப்பகுதியில் மின் விநியோ கம் தடைபட்டது.
மனைவியை கொல்ல முயன்ற கணவர் உட்பட ஐந்து பேர் கைது
திருப்பூர், ஜூன் 5 - திருப்பூரில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர் உட்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி மாறன். இவர் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகி றார். இவரது மனைவி மாங்கனி . இருவரும் காதலித்து திரு மணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள் ளனர். இந்த நிலையில் மணிமாறனுக்கும், அவரது கம்பெனி யில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்யவும் திட்டமிட் டார். இதற்காக தனது நண்பர்கள் 4 பேரிடம் தெரிவித்துள் ளார். அவர்களும் மணிமாறனின் மனைவியை கொலை செய்ய ஒப்புக் கொண்டனர். அதன்படி கடந்த 2ஆம் தேதி இரவு மாங்கனி வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தபோது மணிமாறனின் நண் பர்கள் 4 பேரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் மணிமாறன் உள்ளே வரவழைத்தார். பின்னர் மாங்கனி தூங்கி கொண்டிருந்த அறைக்குள் சென்ற 4 பேரும் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர். மாங்கனி சத்தம் போடவே 4 பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என் பது தெரிய வரவே இது குறித்து மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்த காவல் துறையினர் சம்பவத் தின் உண்மை தண்மையை உறுதிப்படுத்தி கணவர் உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர்.
பெண்ணை ஏமாற்றி குழந்தையுடன் அழைத்துச் சென்றவர் கைது
திருப்பூர், ஜூன் 5 - திருப்பூரில் சமூக வலைதளம் மூலம் பழகி பெண்ணை ஏமாற்றி குழந்தையுடன் அழைத்துச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என கடந்த மாதம் 20ஆம் தேதி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண் டனர். இந்த நிலையில் பெண்ணுடன் சமூக வலைதள மூலம் அறிமுகமான சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ராமச் சந்திரன் என்பவர் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி அப்பெண் மற்றும் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையிலான காவல்துறை யினர் நாகர்கோயிலில் பதுங்கியிருந்த ராமச்சந்திரனை கைது செய்து அவரிடமிருந்து பெண் மற்றும் குழந்தையை மீட்டு அழைத்து வந்து கணவரிடம் ஒப்படைத்தனர்.
பொங்குபாளையத்தில் சமுதாய நலக்கூடம் கட்டித் தர கோரிக்கை
திருப்பூர், ஜூன் 5- திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொங்கு பாளையம் ஊராட்சி பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டித் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்குபாளையம் கிளை செய லாளர் எஸ்.அப்புசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப் பதாவது, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொங்கு பாளையம் ஊராட்சி பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக் கையாகும். திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கும் புதிய திருப்பூர் நேதாஜி பூங்காவிற்கும் நடுமந்தியில் உள்ளதால் இந்த ஊராட்சி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து 40க்கும் மேற்பட்ட பகுதியாக உருவாகியுள்ளது. இதில் தற்போது மக்கள் தொகை 17,000 க்கும் மேல் உள்ளது. இங்கு உள்ள ஏழை எளிய சாதாரண மக்கள் திருமணம் நிகழ்வுகளுக்காக தனியார் திருமண மண்டபங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் திருமணம் மற்றும் சிறப்பு நிகழ்வுக ளுக்கு பயன்படுத்தும் விதத்தில் பொங்குபாளையம் ஊராட்சி பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும் கூறப் பட்டுள்ளது.
கல்லூரியில் மாணவர் சேர்க்கை தாமதம் பெற்றோர்கள் சாலை மறியல்
திருப்பூர், ஜூன் திருப்பூரில் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தாமதப் படுத்துவதாக கூறி மாணவிகளுடன் பெற்றோர்கள் திங்க ளன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பல்லடம் சாலையில் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் மாணவர் சேர்க்கை நடத்தப் படாமல் திங்கட்கிழமை சேர்க்கை நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்களன்று மாணவர் சேர்க்கைக்கு வந்திருந்தவர்களிடம் மாணவர் சேர்க்கை நடைபெறாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. அதிருப்தி அடைந்த பெற்றோர் மாணவிகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கல்லூரி வளா கத்திற்குள் அழைத்துச் சென்று கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
க்யூஆர் கோடு மூலம் பயணச்சீட்டு தனியார் பேருந்தில் அறிமுகம்
கோவை, ஜூன் 5- தமிழகத்திலேயே முதன் முறையாக கோவையில் தனி யார் பேருந்துகளில் க்யூஆர் கோடு மூலமாக பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து வடவள்ளி நோக்கி செல்லும் ஜெய்சக்தி என்ற பேருந்தின் உட்பகுதியில் க்யூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளன. இதனை ஸ்கேன் செய்வ தன் மூலமாக நாம் பேருந்து பயணத்திற்கான பயணச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியும். சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க க்யூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளதாக பேருந்தின் நடத்துநர் தீபக்குமார் தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறு கையில், “சில்லறை தட்டுப்பாடு அதிகரித்திருப்பதாக பேருந் தின் உரிமையாளரிடம் கூறினோம். இதனால், அவர் க்யூஆர் கோடு முறையை எங்கள் பேருந்தில் கொண்டு வந்தார். பயணி ஒருவர் ஸ்கேன் செய்து பணம் செலுத்தியவுடன் அதனை எங்க ளுக்கு தெரிவிக்கும் படி எங்களது செல்போனில் செயலி ஒன் றும் நிறுவப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் கீழ் இயங் கும் 5 பேருந்துகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
பலத்த காற்றுக்கு வாழை மரங்கள் சேதம்
ஈரோடு, ஜூன் 5- ஈரோட்டில் வீசிய பலத்த காற்றுக்கு வாழை மரங்கள் சேதமடைந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக் கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ள னர். தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஈரோட்டில் வெயிலின் தாக்கம் தற்போதும் உச்சத்திலேயே உள்ளது. இதற்கிடையே இரவு நேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவது, மக்களிடையே மகிழ்ச் சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சனியன்று இரவு திடீரென பலத்த காற்று வீச தொடங்கியது. அப்போது இடி, மின்னலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது காற் றில் புழுதி பறந்ததால், சாலைகளில் நடந்து சென்ற மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்தனர். வெண்டிபாளை யத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற் பட்டதால், சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. நள்ளிரவில் 3 மணி நேரத் துக்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் அவதியடைந்தனர். இதேபோல வாய்க்கால்மேடு, கருக்கம் பாளையம் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக குழந்தைசாமி, கந்தசாமி ஆகிய விவசாயிகளுக்கு சொந்தமான நிலங் களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. அதேபகுதியில் சின்னப்பன் என்பவருக்கு சொந்தமான 20 வீடுகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு தங்கி உள்ளனர். அதில் உள்ள 15 வீடுகளில் சிமெண்டு ஓடு களால் போடப்பட்டு இருந்த மேற்கூரைகள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குபிடிக்க முடியா மல், தூக்கி வீசப்பட்டன. இதனால், அந்த வீடுகளில் தங்கி இருந்தவர்கள் இரவு முழுவ தும் தங்குவதற்கு இடமின்றி தவிப்பிற்குள் ளாகினர். மேலும், கூரப்பாளையம், வாய்க் கால்மேடு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்தன. இதனால் கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
12,500 சோலை மரக்கன்றுகள் நட முடிவு
கோவை, ஜூன் 5- பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனை மலை பகுதிகளில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட மரங்களுக்கு ஈடாக 12 ஆயிரத்து 500 சோலை மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப வாகன போக்கு வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் குறு கிய சாலைகளால் விபத்துகள் ஏற்பட்டு வரு கின்றன. எனவே, விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நோக் கில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வரு கின்றன. பொள்ளாச்சி பகுதியில் பாலக்காடு ரோடு, வால்பாறை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளை அகலப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இதற்கிடையில் சாலை பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக மரக் கன்றுகளை நடும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தற் போது பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக் கடவு ஆகிய உட்வட்டங்களில் 12,500 சோலை மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ள னர்.
பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை
உதகை, ஜூன் 5- நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்ப கம் மற்றும் அவன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையால், அப்பகுதி முழுவதும் உள்ள வனப்பகுதி பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் சாலை யோரங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மான்கள், மயில், யானை போன்ற வனவிலங்குகள் உலா வருகின்றன. இந்நிலையில், சிங்கார வனப்பகுதி அருகே உள்ள தனியா ருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் உள்ள பாறை மீது சிறுத்தை ஒன்று ஒரு மணி நேரம் ஒய்யாரமாக ஓய் வெடுத்தது. அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வாக னங்களை நிறுத்தி சிறுத்தை ஓய்வெடுப்பதை கண்டு ரசித்த னர். யாரையும், எதை பற்றியும் பொருட்படுத்தாத அந்த சிறுத்தை இரவு வரை பாறையில் அமர்ந்திருந்தது.