districts

img

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஏப்.28- காவிரி உபரிநீர் திட்டத்தை நிறை வேற்ற விரைந்து நிதி ஒதுக்க வேண் டும் என குறைதீர் கூட்டத்தில் விவ சாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கி. சாந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க  பிரதிநிதிகள் பேசுகையில், ஏரிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து உள்ளன. இதனால் குறைந்த அளவே தண்ணீர் ஏரிகளில் நிரம்புகிறது. எனவே, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த கரும்புகளை வெட்டி முடிந்த நிலை யில் ஆலை அரவையை நிறுத்தப்படு கிறது என்றும், மே 9 ஆம் தேதி அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

இதனால் பயிரிடப்பட்ட கரும்புகள் அனைத்தும் வெட்டி அர வைக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத் தில் உள்ள இரண்டு சர்க்கரை ஆலை களில் பதிவு செய்த கரும்புகளை அரவை செய்த பிறகு அரவையை நிறுத்த வேண்டும், என்றனர். புலிகரை பகுதியை சேர்ந்த விவ சாயி பேசுகையில், மஞ்சள், தென் னைக்கு புவிசார் குறியீடு கிடைத் துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல பாரம்பரிய விதைகளை பாது காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக்கொண்டார். பென் னாகரம், பாலக்கோடு வனப்பகு தியை ஒட்டியுள்ள நிலங்களில் மயில் விவசாய பயிர்களை சேதப்படுத்து கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி உபரிநீரி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் அனிதா, மாவட்ட  வருவாய் அலுவலர்/அரூர் கூட்டு றவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, கூட்டுறவு சங் கங்களின் இணைப்பதிவாளர் ராம தாஸ், தருமபுரி வேளாண்மை இணை  இயக்குநர் விஜயா, கால்நடை பரா மரிப்புத்துறை மண்டல இணை இயக் குநர் சாமிநாதன், வேளாண்மை  பொறியியல் துறை செயற்பொறியா ளர் மாது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக் குநர் மாலினி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.