திருப்பூர், ஜூலை 22 - திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் காட்டுப் பாளையம் கிராமம் உள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின் தகடு, குழாய்கள், மோட்டார் பம்ப் ஆகியவற்றை சுயநலமிகள் சிலர் எடுத்துச் சென்றுள்ளனர். உடனடியாக இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்பு சாமி கோரிக்கை மனு அளித்தார். திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட, அவிநாசி தாலுகா சொக்க னூர் ஊராட்சியில் காட்டுப்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு க.ச.எண் 296 உள்ள அரசு வாரி ஓடை புறம்போக்கில் ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டை அவிநாசி அத்திக் கடவு திட்டத்தில் நீர் நிரப்புவதற்காக பட்டிய லில் இணைக்கப்பட்ட குட்டை ஆகும். இந்த குட்டையில் நீர் நிரப்புவதற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, நீரை உறிஞ்சுவதற்கு மோட் டார் பம்ப் செட் வைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் பம்ப் செட்டை இயக்க மின் தேவைக்காக சூரிய ஒளித் தகடும் அமைக்கப் பட்டுள்ளது.
ஆனால் இந்த குட்டை அருகில் க.ச.எண் 297, 298 இல் உள்ள தனி நபர்கள் சிலர் இந்த குட்டையின் ஒரு சில பகுதிகளை ஆக்கி ரமிப்பு செய்து உள்ளதால், இவர்களின் நிர்ப் பந்தம் காரணமாக இக்குட்டையில் அமைக் கப்பட்டு இருந்த மின் மோட்டார் பம்ப் செட் வைத்திருந்த காங்கிரீட் மேடையை இடித்து, அதில் இருந்த மோட்டார் பம்ப் மற்றும் சூரிய ஒளித் தகடு ஆகியவற்றையும் எடுத்துச் சென்று விட்டனர். இந்த குட்டையைச் சுற்றி காட்டுப்பா ளையம் அருகில் பட்டம்பாளையம் பகுதிக ளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய பாசன நிலங்கள் உள்ளன. மேலும் 25க்கும் மேற்பட்ட திறந்தவெளி கிணறுகளும் நூற்றுக்கும் மேற் பட்ட ஆழ்குழாய் கிணறுகளும் உள்ளன. எனவே காட்டுப்பாளையத்தில் க.ச.எண் 296 வாரி ஓடை புறம்போக்கு உள்ள குட் டையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும், அவர்களுக்கு விலை போய், அத்திக்கடவு திட்டத்தில் அமைக்கப்பட்ட பம்ப் செட், மோட்டார், சூரியஒளித் தகடு ஆகியவற்றை எடுத்துச் சென்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குட் டையை நில அளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும், அவிநாசி அத்திக் கடவு திட்டத்தில் இந்த குட்டையில் நீர்நிரப்ப தேர்வு செய்யப்பட்ட அடிப்படையில் திட் டத்தை உறுதிப்படுத்த வேண்டும். இப்பகுதி விவசாயிகள் பயனடையும் முறையில் நீர் நிரப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என் றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியு றுத்தி உள்ளது.